YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

கருத்தடையா? காப்பகமா? தெரு நாய்கள் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்த புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும் என்று பொது மக்கள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்காவிடம் இருந்து அதிக இறக்குமதி செய்யும் இந்தியா.. விவசாயிகளின் காவலராக அவதாரம் எடுத்துள்ள பிரதமர் மோடி!

அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட பின்னடைவுகளை மறைக்க விவசாயிகளின் காவலராக வேடத்தைத் தற்போது ஏற்றிருக்கிறாரா பிரதமர் நரேந்திர மோடி?

எத்தனால் கலந்த பெட்ரோல்: வாகனங்கள் மீது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

”பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுவதால் வாகனங்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவோ அல்லது நுகர்வோருக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துவதாகவோ கூறப்படுவதற்கு எவ்வித தொழில்நுட்ப அடிப்படையும் இல்லை” என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

’சிவசக்தி’ புள்ளி என்ற பெயருக்கு அடிப்படையானது இந்து மதமா? இந்திய தத்துவமா?

’சிவசக்தி’ என்பது ’இயற்கையின் இருமை’ என்று இந்திய தத்துவத்தில் பொருள்படுவதாக சொல்லிதான் ‘IAU'-விடம் இந்த பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்து கடவுள்கள் என்ற அடிப்படையில் அல்ல.

தமிழ்நாடு செலுத்தும் வரியைவிட அதிக நிதி ஒதுக்குகிறதா ஒன்றிய அரசு? உண்மை நிலை என்ன?

ஒன்றிய அரசுக்கு பல்வேறு வகைகளில் செலுத்தும் வரியை விட தமிழ்நாடு குறைவாகவே நிதியை பெறுகிறது.

மோடி ஆட்சியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் நிலை என்ன?

மோடி ஆட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தேவையானதைவிட குறைவாக நிதி ஒதுக்குவது, மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டிய நிதியை நிலுவை வைத்திருப்பது போன்ற காரணங்களால் இந்த திட்டத்தை நம்பிருக்க்கும் கிராமப்புற மக்களுக்கு பெரும் துன்பங்களை கொடுப்பதாக இருக்கிறது.

பீகார் சிறப்பு வாக்காளர் சரிபார்ப்பு! ஆபத்து என்ன?

இந்த தீவிர வாக்காளர் சரிபார்ப்பு (SIR) கிட்டதட்ட 3 கோடி விளிம்புநிலை மக்களை வாக்காளப் பட்டியலிலிருந்து வெளியேற்றும் என்றும் அவர்களின் குடியுரிமைகளை கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

’Heguru’ பயிற்சியை அங்கீகரிக்கிறதா ஒன்றிய அரசு ஆவணம்?

’Heguru’ முறை பற்றி சமூக வலைத்தளங்களில் சொல்லப்பட்ட எதிர்மறையான கருத்துகளுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசின் ‘நவ்சேத்னா’ ஆவணத்தில் இல்லாத தகவல்களையும் தவறான கருத்துகளையும் பரப்பிவருகிறார்கள் இந்திரஜா தம்பதியினர்.

அம்பேத்கரின் வாழ்வில் பிராமணர்கள் முக்கிய பங்கு வகித்ததாக பரவும் செய்திகள்.. உண்மை என்ன?

பார்ப்பன மரபுகள் எப்படி அனைவரையும் அடிமைப்படுத்துகிறது என்பதை அம்பேத்கர் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். `இந்து பெண்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்’ என்கிற அவரது நூலின் மூலம், எப்படி பார்ப்பனிய நூல்களும் பழக்கவழக்கங்களும் பாலின பாகுபாட்டை நிலைநிறுத்துகின்றன என்பதையும் காட்டமாக முன்வைத்தவர் இவர். இந்நிலையில் அம்பேத்கரின் வாழ்வில் பிராமணர்கள் முக்கிய பங்கு வகித்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

“தமிழ்நாடு” என்ற பெயர் முதன்முதலில் யாரால் சூட்டப்பட்டது? வரலாற்று விளக்கம் இதோ!

“திமுக ஆட்சியில் தான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது என்றால், நெய்வேலியில் உள்ள ஒரு பொது மருத்துவமனையின் கல்வெட்டில் 1962 லேயே தமிழ்நாடு என்ற பெயர் எப்படி வந்திருக்கும்” என்று கூறி சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகப் பரவி வருகிறது. உண்மை என்ன?