YouTurn

கட்டுரைகள்

வைரலாகும் தகவல்களின் பின்னணி, தரவுகள், அரசியல் வாக்குறுதிகள் — எங்கள் குழுவின் விரிவான ஆய்வுக் கட்டுரைகள்.

இயக்குனர் பாக்யராஜின் “ பாக்யா “ இதழில் கதை திருட்டா ?

“ சர்கார் “ படத்தின் கதை பிரச்சனையில் நடுநிலையாக இருந்து தீர்ப்பு வழங்கிய திரு.பாக்யராஜ் அவர்களுக்கு சொந்தமான “ பாக்யா “ இதழில் கதை திருட்டு ஒன்று நிகழ்ந்துள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் குற்றம்சாற்றியுள்ளார். அது தொடர்பானதே இக்கட்டுரை. டி.வி.எஸ் சோமு என்ற பத்திரிகையாளர் தன் வாழ்வில் நிகழ்ந்த...

விஷமாய் மாறும் பாங்காக் நகரத்தின் காற்று !

தாய்லாந்தின் சிறந்த சுற்றுலாப் பகுதியான பாங்காக் நகரில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு காற்று மாசடைந்து யாரும் நினைத்து பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்நகரில் காற்று மாசுப்பாட்டின் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. சிவந்த கண்கள், இருமலின் போது இரத்தம் வருவது, மூக்கில் இருந்து இரத்தம்...

அரசியல் விளம்பரத்தில் பதிவிடுபவர் விவரங்களைப் பார்க்கலாம் – பேஸ்புக் புதிய அறிவிப்பு !

இந்தியத் தேர்தல் களத்தில் மக்களின் ஆதாரவை பெறுவதற்கு அதிக அளவில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் தளமாக சமூக வலைதளங்கள் உள்ளன. இதில், அசைக்க முடியாத ஒன்றாக ஃபேஸ்புக் அமைந்து விட்டது. தற்பொழுது எல்லாம் அரசியல் சார்ந்த பதிவுகள், அரசியல் விளம்பரங்களை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஃபேஸ்புக் தளத்தில்...

கர்நாடகாவில் மாட்டு சாணம் திருட்டு !

மாடு காணாமல் போன செய்திகள் பற்றி பார்த்தும் இருப்போம், படித்தும் இருப்போம். ஆனால், வித்தியாசமாக மாட்டு சாணம் காணாமல் போன சம்பவத்தை அறிந்து இருப்போமா ? அதிலும், காணாமல் போன மாட்டு சாணத்தின் மதிப்பு 1.25 லட்சம் என்று சொன்னால் நம்ப முடியுமா ? கர்நாடகாவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த...

ராகுலின் குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதத் திட்டம் | உலகிலேயே முதல் முறையான திட்டமா ?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற விவசாயக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது, ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நேரடியாக கிடைக்கும் வகையில் குறைத்தபட்ச ஊதிய உத்திரவாத திட்டம் பற்றி பேசினார். 2019 தேர்தலில் காங்கிரசை வெற்றிப் பெற செய்து ஆட்சியில்...

சர்ச்சைகளுக்கு மதன் கௌரியின் பதில் !

பிரபல Youtuber ஆன மதன் கௌரி பற்றி சர்ச்சையும், பிரைவசி புகைப்படங்களும் முகநூல் பக்கங்களில் பதிவிடப்படுகிறது. Schumy vanna kaviyangal என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர். சர்ச்சைக்குரிய செய்திகள் பற்றி மதன் கௌரியிடமே youturn நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கு அவர் அளித்த பதில்களும் விவரமாக...

சோசியல் மீடியாவில் ஈமசடங்குக்கு என 15 லட்சம் நிதி திரட்டிய சம்பவம் !

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 55 வயதான வெங்கடேசன் கடந்த 27-ம் தேதி ஆஞ்சநேயர் சிலைக்கு மாலைகள் அணிவித்துக் கொண்டு இருக்கும் பொழுது தவறி விழுந்தார். 8 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் அவரின் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு இறந்து விட்டார். வெங்கடேசனின் தம்பி நாகராஜ் அங்கு பணியாற்றி வருவதால் அவருக்கு...

போலியோ மருந்துகளின் தாமதத்திற்கு நிதி பற்றாக்குறை காரணமா ?

ஜனவரி 18-ம் தேதி சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பீகார், மத்தியப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களைத் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு கடிதத்தின் வாயிலாக தேசிய போலியோ தினம் சார்பில் பிப்ரவரி 3-ம் தேதி அமைக்கப்பட இருந்த போலியோ மருந்து முகாம்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைப்பதாக...

தமிழக ஊர்தியில் ஏன் கோவணத்துடன் விவசாயி உருவம் ?

நாட்டின் 70-ம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்புகள் நடைபெற்றன. ஒவ்வொரு மாநிலத்தின் பண்பாட்டு சிறப்புகள் அடங்கியதாக அலங்கரிக்கப்பட்ட ஊர்திகள் அணிவகுக்கும். இவ்வருடம் தமிழகத்தின் சார்பாக அணிவகுத்த ஊர்தியில் காந்தியின் உருவமும், ஏழை விவசாயிகள் கோவணத்துடன்...

குழந்தைகளின் நப்பீஸ்களில் அபாயமான கெமிக்கல்கள் கண்டுபிடிப்பு !

குழந்தைகளுக்கு பயன்படுத்தும் நப்பீஸ்(Nappies) குறித்து வெளியான ஆய்வு அறிக்கையில் அவற்றில் இருக்கும் கெமிக்கல்கள் பாதுகாப்பான அளவைத் தாண்டி இருப்பதாகவும், சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான கிளைப்போசேட் உள்ளிட்டவை சிறிதளவில் இருப்பதாகவும் பிரான்ஸ் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த...

எதற்காக ஜக்டோ ஜியோ போராட்டம் ?

ஜனவரி 22-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் ஜக்டோ ஜியோ அமைப்பின் மூலம் ஒன்றிணைந்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டம் சில இடங்களில் சாலை மறியல், கைது நடவடிக்கை செய்யும் அளவிற்கு மாறி வருகிறது. அரசு ஆசிரியர்களின் ஊதிய விவகாரத்திலும், ஓய்வூதியம் தொடர்பாக...

நார்த்தாமலையில் பிரச்சனை செய்தது இவர்கள் தான்!

நார்த்தாமலை கிராமத்தில் இருந்த மலையின் சுனை நீரில் இருந்து 148 ஆண்டுகளுக்கு பிறகு “ யாதும் ஊரே யாவரும் கேளீர் ” அமைப்பினரின் முயற்சியால் மீட்கப்பட்ட சிவ லிங்கத்தின் பூஜை விவகாரத்தில் அர்ச்சகர்கள் இருவர் பிரச்சனை செய்த முழு நிகழ்வையும் கட்டுரை வடிவில் முன்பு வெளியிட்டு இருந்தோம். உண்மை நிகழ்வை...