யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தபால்தலையை வெளியிட்ட ஒன்றிய அரசு எனப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் தபால் தலையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் வெளியிட்டதாக பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
தேமுதிக நிறுவனரும் நடிகருமான மறைந்த விஜயகாந்தின் தபால் தலை வெளியிடப்பட்டதாக எந்த ஒரு நிகழ்வும் நடந்ததாகச் செய்தி இல்லை. மேலும் தபால் தலையில் இந்தியா என்று எங்கும் எழுதப்படவில்லை. அதே போல் தபால் தலை எவ்வளவு விலை என்பதும் குறிப்பிடப்படவில்லை.
இதையடுத்து Stamps Of India இணையதளப்பக்கத்தில், 1947 முதல் 2025 வரை வெளியான தபால் தலைகளை பார்த்த போது, மறைந்த விஜயகாந்தின் தபால் தலை வெளியானது குறித்து எந்த தகவலும் இல்லை.

அதே போல் Postage Stamps இணையதளப்பக்கத்திலும் 2026ஆம் ஆண்டு வெளியான தபால் தலைகளை தேடிப் பார்த்தோம். அங்கும் விஜய்காந்திற்கு தபால் தலை வெளியிட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

இதை உறுதி செய்ய பரவி வரும் புகைப்படத்தை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் புகைப்படம், 99.7% இது AI மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.

முடிவு:
நம் தேடலில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தபால்தலையை வெளியிட்ட ஒன்றிய அரசு எனப் பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது.
