YouTurn

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்த்த போதும் எடுக்கப்பட்டவை ஆகும்.

பரவிய செய்தி

இந்தியா-சீனா எல்லையில் மீண்டும் பேரழிவு. சீன இராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் 60 கி.மீ. வரை ஊடுருவி அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்!


Facebook Link


Facebook Link


விரிவான விளக்கம்

இராணுவச் சீருடை அணிந்த படை ஒரு கிராமத்திற்குள் அணிவகுத்து நுழைகிறது. அந்த கிராமத்தினர் கைகளில் தடிக்கம்புகளை கொண்டு அந்த இராணுவத்தினரை தடுக்கிறார்கள். இதனை காட்சிபடுத்தும் மூன்று வீடியோ துணுக்குகளை பேஸ்புக் தளத்தில் பதிவிட்டு, ‘இந்தியா சீனா எல்லையை கடந்து சீன இராணுவ வீரர்கள் இந்தியாவிற்குள் 60 கி.மீ வரை ஊடுருவி விட்டதாக’ பரப்பப்படுகிறது.




உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த வீடியோக்களின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடினோம்.



முதலில், தாய்லாந்தை மொழியில் உள்ள பேஸ்புக் பக்கத்தில் இராணுவப் படை ஒன்று அணி வகுத்துச் செல்லும் வீடியோவைக் காணமுடிந்தது. கடந்த ஜூன் 16ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், தாய்லாந்து மொழியில் ‘நீண்ட தூர பயணம்’ என்றும், 102ஆவது படைப்பிரிவு (Regiment) என்றும் எழுதப்பட்டிருந்தது. 



அடுத்ததாக, ’Lallu Ram’ என்ற ‘எக்ஸ்’ பக்கத்தில் மக்கள் தடிகளுடன் இராணுவத்தை எதிர்கொள்ளும் வீடியோவைக் காணமுடிந்தது. கடந்த ஜூன் 8ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த பதிவில், ’மணிப்பூரில் உள்ள உக்ருல் மாவட்டத்தில் உள்ள கிராம் ஒன்றில் ’அசாம் ரைபில்ஸ்’ படை நுழைவதை எதிர்த்து நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டம் நடத்தியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 



இதனைக் கொண்டு தேடியதில், ‘India Today’ செய்தித்தளத்தில் கடந்த ஜூன் 8ஆம் தேதி வெளியாகியுள்ள செய்தியைக் காணமுடிந்தது. அதில், ‘மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள நீயூ ஹவன் என்ற கிராமத்தில் கிராம நிர்வாகத்தின் அனுமதி பெறாமலே ’அசாம் ரைபில்ஸ்’ படை சாவடி அமைக்க முயன்றதை கிராமத்தில் உள்ள பெண்கள் எதிர்த்தனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, பரப்பப்படும் இந்த வீடியோக்கள் தாய்லாந்து நாட்டின் இராணுவப் படைப்பிரிவு ஒன்று அவர்களது நாட்டில் நீண்ட அணிவகுப்பு மேற்கொண்டது, மணிப்பூர் மாநிலத்தில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் சாவடி அமைப்பதை மக்கள் எதிர்த்தது ஆகிய சம்பவங்கள் குறித்தவை தான் என்பது தெளிவாக தெரிகிறது. 


முடிவு:


சீன இராணும் இந்திய எல்லைக்குள் 60 கி.மீ வரை ஊடுருவி அணிவகுப்பு செய்வதாக தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

பொய்

சீனாவில் 4000 ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ்! சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

20 ஆண்டுகளுக்கு முன்னர் 2005ஆம் ஆண்டிலே சீனாவில் 4000 ஆண்டுகள் பழையான நூடுல்ஸை சீனா அறிவியல் அகாடமியால் கண்டுபிடிக்கப்பட்டு செய்தியாக வெளியிடப்பட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க