YouTurn

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

பரவிய செய்தி

"If a patient dies in a hospital, the family will pay NOTHING." - CM Vijay's Proposal on Hospital Reforms


விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினர் ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாகப் சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. 


உண்மை என்ன? 


பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 


இதையடுத்து தமிழ்நாட்டின் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களிலும் தேடிப் பார்த்த போது,  இது தொடர்பான எந்த செய்தியும் வெளியாகவில்லை. 


அதே போல செய்தி ஊடகங்களிலும் இது குறித்தான செய்தி வெளியாகிவுள்ளதா என்று பார்த்த போது, முதல்வர் அறிவித்ததாக இது சம்பந்தமான எந்த செய்தியும் வெளியாகவில்லை. 


இதை வைத்து பார்க்கும் போது, பரவி வரும் தகவல் ஆதாரமற்றவை என்பது உறுதியானது. 


முடிவு: 


எனவே, தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினர் ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாகப் பரவும் செய்தி போலியானது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

பொய்

சீனாவில் 4000 ஆண்டுகள் பழமையான நூடுல்ஸ்! சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

20 ஆண்டுகளுக்கு முன்னர் 2005ஆம் ஆண்டிலே சீனாவில் 4000 ஆண்டுகள் பழையான நூடுல்ஸை சீனா அறிவியல் அகாடமியால் கண்டுபிடிக்கப்பட்டு செய்தியாக வெளியிடப்பட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க