YouTurn

ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

 ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று உறுதிபடுத்தியுள்ளது.

பரவிய செய்தி

என்னது பைக்குக்கு கட்டணமா.?

ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய பாஜக அரசு முடிவு 

சாமானிய மக்களின் உழைப்பை

வரி என்ற பெயரில் புடுங்கும்

ஒன்றிய பாஜக அரசு...!

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

வரும் ஜூலை 15 முதல் இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு பரசீலித்து வருவதாக சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. சாமானிய மக்களின் உழைப்பை

வரி என்ற பெயரில் ஒன்றிய அரசு வசூலித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


உண்மை என்ன? 

பரவி வரும் இந்த தகவல் குறித்து தேடி பார்த்தோம். அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இது குறித்து ஜூன் 26ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டுயிருந்தது. அதில் ”இந்திய அரசு இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், இத்தகைய திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்பதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெளிவுபடுத்த விரும்புவதாகவும், இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை” எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  


அதே போல் ஒன்றிய சாலைப் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் தனது எக்ஸ் பக்கத்தில், வைரலாகும் பதிவு தவறானது என்பதை உறுதி செய்துள்ளார். அதில் அவர், ”சில ஊடகங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்கவிருப்பதாக தவறான செய்திகளைப் பரப்புகின்றன என்றும், உண்மைத்தன்மையை ஆராயாமல் தவறான செய்திகளைப் பரப்பி, அதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடகத்திற்கு அடையாளம் அல்ல” எனவும் தெரிவித்துள்ளார். 


மேலும் PIB Tamilnadu தனது எக்ஸ் பக்கத்தில், பரவி வரும் செய்தி தவறனாது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளதை பார்க்கமுடிந்தது. 


முடிவு : 

நம் தேடலில், ஜூலை 15 முதல் இரு சக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு முடிவு எனப் பரவி வரும் செய்திகள் தவறானவை என்பது தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க