YouTurn

மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதை சாலை சேதமடைந்ததாகப் பரவும் தவறான தகவல்!

மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதை சாலை சேதமடைந்ததாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அடல் சுரங்கப்பாதை நுழைவாயில் சேதமடைந்ததாகப் பரவும் வீடியோ துருக்கியில் எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

விண்வெளி தொழில்நுட்பத்தால் செய்யப்பட்ட அடல் சுரங்கத்துடன் கூடிய ரோடும் ஸ்வாஹா.

X link

விரிவான விளக்கம்

இமாச்சலப்பிரதேசத்தில் மணாலி மற்றும் லே பகுதிகளை இணைக்கும் அடல் சுரங்கப் பாதையைப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர், 2020ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.  



                Facebook Link

இந்த சுரங்கப்பாதையின் நுழைவுவாயிலில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை பெரும் சேதம் அடைந்துள்ளதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் திமுகவினரால் பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசின் 7 திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஒன்றிய தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியது எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசுபொருளானது. இத்தகைய நிகழ்வுகளுடன் ஒப்பிடும் வகையில்தான் அடல் சுரங்கப்பாதையின் நுழைவாயில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக வீடியோ பகிரப்படுகிறது. 

பரவக்கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், இதுதொடர்பாகத் துருக்கி மொழியில் இயங்கக்கூடிய தளத்தில் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் செய்திகள் வெளியாகியிருப்பதைக் காணமுடிந்தது.



அச்செய்திகளைக் கூகுள் மொழிபெயர்ப்பு உதவியுடன் மொழிபெயர்த்துப் படித்ததில், துருக்கி நாட்டில் Ordu என்ற பகுதியில் தொடர்ந்து 3 நாட்கள் அதிகனமழை பெய்துவந்த நிலையில் Black Sea - Mediterranean சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது. 


இதுதொடர்பான ’Haberler’, ‘Turkgun’ போன்ற தளங்களில் வீடியோவுடன் செய்திகள் வெளியாகியுள்ளது. இவற்றில் இருந்து இச்சம்பவம் துருக்கியில் நடந்தது என்பதை அறியமுடிகிறது. இதனை அடல் சுரங்கப்பாதை எனத் தவறாகப் பரப்புகின்றனர். 

முடிவு: 

அடல் சுரங்கப்பாதையின் நுழைவாயில் பெரும் சேதம் அடைந்ததாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது கடந்த ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சேதமடைந்த சாலையுடன் தொடர்புடைய வீடியோ.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.