யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.
பரவிய செய்தி
’கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்தான்’ - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.
விரிவான விளக்கம்
கடந்த ஜூலை 21ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், ‘கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தமிழ்வழிக் (Tamil Medium) கல்வியில் படித்தவர்தான்’ என்று குறிப்பிட்டார்.
#WATCH | “அமெரிக்கா எடுத்த பிச்சைதான் சுந்தர் பிச்சை..” -அமைச்சர் ராஜ்மோகன்#SunNews | #SundarPichai | #Rajmohan | @sundarpichai pic.twitter.com/ncuclb0XXg
உண்மை என்ன?
கூகுள் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சையின் பள்ளிக்கல்வி குறித்த தகவல்களை இணையத்தில் தேடியபோது, ‘Times of India’ செய்தித்தளத்தில் வெளியாகியிருந்த செய்தியில் சுந்தர் பிச்சையின் வாழ்க்கை குறிப்புகளைக் காணமுடிந்தது.

அதன்படி, ’மதுரையில் பிறந்தவராக இருந்தாலும் சுந்தர் பிச்சை சென்னை அசோக் நகரில் தான் வளர்ந்திருக்கிறார். ஜவகர் வித்யாலயா என்னும் CBSE பள்ளியிலும் பின்னர் சென்னை IIT வளாகத்தில் உள்ள ’வனவாணி பள்ளி’யிலும் அவர் பள்ளிக்கல்வி பயின்றதாக’ தெரியவருகிறது. இந்த வனவாணி பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி தான் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ’The Hindu’ செய்தித்தளத்தில் உள்ள ஒரு செய்தியில், சுந்தர் பிச்சை சென்னை அசோக் நகரில் உள்ள ஜவகர் வித்யாலயா பள்ளியில் 1979 முதல் 1987 வரையில் படித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது CBSE பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார் என்பது தெரிவருகிறது.
முடிவு:
கூகுள் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை தமிழ்வழிக் கல்வியில் படித்ததாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தவறான தகவலை பரப்புகிறார்.