யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவனது கூட்டாளி முகமது அலி இருவரையும், ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படைப்பிரிவு. கைது நடவடிக்கைக்கு பிறகு அபுபக்கர் சித்திக் தங்கி இருந்த வீட்டில் ஆந்திர காவல்துறை நடத்திய சோதனையில் வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பரவிய செய்தி
தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு பயங்கரவாத செயல்களை நடத்திட சதித்திட்டமா?
30 வருடம் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை ஆந்திர போலீஸார் கைபற்றினர்.−செய்தி
தமிழ்நாடு போலீஸார் எங்க போனாங்க?
தேசிய புலனாய்வு அமைப்புக்கு NIA போலீசாருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால் ஆந்திராவிலிருந்து காவல்துறை வந்துள்ளது.
இதைப்பற்றி தமிழக ஊடகங்கள் விரிவான செய்திகளோ! விவாதங்களோ நடத்தவில்லை!

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு பயங்கரவாத செயல்களை நடத்திட சதித்திட்டமா என்றும், 30 வருடம் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை ஆந்திர போலீஸார் கைப்பற்றியதாகவும், தமிழ்நாடு போலீஸார் எங்க போனாங்க எனவும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு பயங்கரவாத செயல்களை நடத்திட சதித்திட்டமா?
30 வருடம் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை ஆந்திர போலீஸார் கைபற்றினர்.−செய்தி
தமிழ்நாடு போலீஸார் எங்க போனாங்க?
தேசிய புலனாய்வு அமைப்புக்கு NIA… pic.twitter.com/UYRFyeI9UL
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து தேடி பார்த்தோம். அப்போது TN DIPR-இன் எக்ஸ் பக்கத்தில் ஜூலை 1, 2025 அன்று "தமிழ்நாடு காவல் துறை 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் தமிழ்நாடு காவல் துறையினரால் கைது" என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியாகியிருந்ததை காணமுடிந்தது. அதில் 1995 முதல் தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளுக்கு திட்டம் தீட்டி தீவிரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி தனிப் படையினரால் ஆந்திர மாநிலம் அன்னையார் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு காவல் துறை
30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் தமிழ்நாடு காவல் துறையினரால் கைது#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @tnpoliceoffl pic.twitter.com/RtRP9Mn9Zr
இது குறித்து மேலும் தேடி பார்க்கையில், ஜூலை 3, 2025 அன்று The Hindu ஊடகப் பக்கத்தில் வெளியான செய்தி ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் "பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவனது கூட்டாளி முகமது அலி இருவரையும், ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படைப்பிரிவு. கைது நடவடிக்கைக்கு பிறகு அபுபக்கர் சித்திக் தங்கி இருந்த வீட்டில் ஆந்திர காவல்துறை நடத்திய சோதனையில் வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போல் ND TV, Hindustan Times போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

முடிவு:
பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் மற்றும் அவனது கூட்டாளி முகமது அலி இருவரையும், ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் தனிப்படைப்பிரிவு. இதை மறைத்து தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தவறாக பரப்பி வருகிறார்.