YouTurn

பீகாரில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது எடுக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

பீகாரில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது எடுக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2024 ஏப்ரம் மாதம் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தின் சகாரன்பூரில் ரோடு ஷோ சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

பீகாரில் பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூடிய இலட்சக்கணக்கான மக்கள். 



X Link / Archive Link



Facebook Link / Archive Link 

விரிவான விளக்கம்

பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இதில் முதல் கட்டத்திற்காக தேர்தல் பிரச்சாரம் நவம்பர் 4ஆம் தேதியோடு முடிந்தது. 


இந்நிலையில், ’நகரத்தின் தெரு ஒன்றில் மிகப்பெரும் அளவில் மக்கள் திரண்டிருக்க, அவர்களுக்கு மத்தியில் காரில் செல்லும் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும்’ வீடியோவை பதிவிட்டு, இது பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரச்சாரத்திற்காக பிரியங்கா காந்தி வந்தபோது கூடிய கூட்டம் என்று சமூக வலைத்தளங்களில், INDIA கூட்டணி ஆதரவாளர்களால் பரப்பப்படுகிறது.

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியதில், காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ, ‘காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சகாரன்பூர் என்ற நகரத்தில் ரோடு ஷோ சென்றபோது எடுக்கப்பட்டதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் யூடியூப் தளத்திலும் இந்த வீடியோ, சகாரன்பூரில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ சென்றபோது எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டு பதிவிடப்பட்டுள்ளது. 


image.png


இதிலிருந்து, இந்த வீடியோ பீகாரில் அல்ல உத்தர பிரதேசத்தில் எடுக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. மேலும் இந்த வீடியோ ஓராண்டிற்கும் முன்பே எடுக்கப்பட்டது என்பதும் பீகார் தேர்தல் பிரச்சாரத்திற்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெரியவருகிறது.


முடிவு:


ஓராண்டிற்கு முன்னால் உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை, தற்போது பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு எடுக்கப்பட்டதாக தவறாக பரப்பப்படுகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க