YouTurn

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் என்று பரவும் வீடியோ!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வரும் செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் என்று பரவும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வீடியோவில் காட்டப்பட்டுள்ள செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் வீடியோவில் காட்டப்படும் கோவில் ஊழியரின் ID card Tag-ல், ASI என்று எழுதப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

பரவிய செய்தி

சைவ கோவிலில் அசைவம் சாப்பிட்ட ஊழியர். இந்து கோயில்களில் அசைவ சாப்பாடு சாப்பிடுவது தொடக்கதையாகிவிட்டது. 

இந்து அறநிலை துறை என்ன செய்யப் போகிறது. 

@tnhrcedept @PKSekarbabu

@CMOTamilnadu @TNDIPRNEWS @HRajaBJP @NainarBJP

image.png

X Link | Archived Link 

விரிவான விளக்கம்

சைவ கோயிலில் ஊழியர் ஒருவர் அசைவம் சாப்பிடதாகவும், இந்து கோயில்களில் அசைவ சாப்பிடுவது தொடர் கதையாகிவிட்டதாகவும், இந்து அறநிலை துறை என்ன செய்யப் போகிறது என்றும் கூறி  1 நிமிடம் 03 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவில் கடைசியில் பேசிய நபர், இது செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் என்று குறிப்பிடுவதை பார்க்கமுடிந்தது. அதே போல் வீடியோவில் காட்டப்படும் கோவில் ஊழியரின் ID card Tag-ல், ASI ( Archaeological Survey of India ) என்று எழுதப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. இதையடுத்து இந்த கோயில் இந்து அறநிலை துறைக்கு கீழ் செயல்படுகிறதா என்பது குறித்து தேடி பார்த்தோம். அப்போது தினமலர் ஊடகப் பக்கத்தில், கோயில்கள் என்று ஒரு தொகுப்பு இருந்தது. அதில் ”செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவில் ராஜகோபுரத்தில் மரம் : பக்தர்கள் வேதனை” என்ற தலைப்பில் அக்டோபர் 11, 2022 அன்று கோவில் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. 


அதில் செஞ்சி கோட்டையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ள வெங்கட்ரமணர் ராஜ கோபுரத்தில் மரங்கள் வளர்ந்து சிலைகள் இடிந்து விழும் பரிதாப நிலையில் இருப்பதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளதாகவும், தற்போது இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் வெங்கட்ரமணர் கோவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


மேலும் இதை உறுதி செய்ய, செஞ்சியில் இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் குறித்து தேடி பார்த்தோம். அப்போது List of Monuments and Sites, GINGEE SUB-CIRCLE என்ற pdf ஒன்று கிடைத்தது. அதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள வெங்கட்ரமணசாமி கோவில், இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


முடிவு : 

வீடியோவில் காட்டப்பட்டுள்ள செஞ்சி வெங்கட்ரமணசாமி கோவில் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் வருவதாகக் கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க