YouTurn

மக்களவையில் அனுராக் தாக்கூர் கேட்ட கேள்விக்கு ராகுல் பதில் தெரியாமல் முழித்ததாகப் பரவும் பொய்!

மக்களவையில் அனுராக் தாக்கூர் கேட்ட கேள்விக்கு ராகுல் பதில் தெரியாமல்  முழித்ததாகப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மரண பங்கமாக ராகுல் காந்தி கலாய்க்கப்பட்ட தருணம்! இந்த அவமானம் உனக்கு தேவையா? 


X link

விரிவான விளக்கம்

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் உரை பேசுபொருளானது. 

இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் ராகுல் காந்தியை பார்த்து கேட்ட கேள்விக்கு அவரால் பதில்சொல்ல முடியவில்லை என வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



அதில், ’அரசியல் அமைப்பில் எத்தனை பக்கங்கள் இருக்கிறது. தினமும் அதனைத் தூக்கிக்கொண்டு வருகிறீர்கள். ஒருமுறையாவது திறந்து படியுங்கள்’ என அனுராக் தாக்கூர் கூறுவது போலவும் அதற்கு ராகுல் காந்தி பதில்சொல்ல முடியாமல் அமைதியாக இருப்பது போலவும் காண்பிக்கப்படுகிறது. 



உண்மை என்ன?

நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பும் Sansad TV’ யூடியூப் பக்கத்தில் அனுராக் தாக்கூர் பேசிய முழு வீடியோ கடந்த 1ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அந்த முழு வீடியோவில் அரசியலமைப்பு பற்றி அவர் பேசிய பகுதி 56.44 நிமிடத்தில் இடம் பெற்றுள்ளது. 



அவர் பேசும்போது அவையில் உள்ள எதிர்க்கட்சியினர் வீடியோவில் காண்பிக்கப்படுகின்றனர். அப்போது ராகுல் காந்தி அவையில் இல்லை. 

மேலும் ராகுல் காந்தி பேசுகையில், சபாநாயகர் இருக்கையில் 'ஓம் பிர்லா' அமர்ந்திருந்தார். ஆனால், அனுராக் பேசுகையில் 'திலிப் சைகியா' சபாநாயகராக இருக்கையில் அமர்ந்திருந்தார். எனவே இவர்கள் இருவர் பேசியதும் வெவ்வேறு நேரத்தில் நிகழ்ந்தவை என்பதை அறியமுடிகிறது. 



பரவக்கூடிய வீடியோவில் ராகுல் காந்தி பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பது போன்று காட்டப்படும் காட்சிகள், ராகுல் காந்தியின் உரையின் போது எடுக்கப்பட்டவை. இதனை அனுராக்கின் வீடியோவுடன் சேர்த்து எடிட் செய்து தவறாகச் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

முடிவு: 

அரசியலமைப்பு புத்தகத்தில் எத்தனை பக்கங்கள் உள்ளது என அனுராக் தாக்கூர் கேட்ட கேள்விக்கு ராகுல் காந்தி பதில் தெரியாமல் நின்றதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அனுராக் அப்படிப் பேசும்போது ராகுல் காந்தி அவையில் இல்லை. பரவக் கூடிய வீடியோ இரண்டு வெவ்வேறு வீடியோக்களை வெட்டி ஒட்டி எடிட் செய்யப்பட்டது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.