
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
அயோத்தியில் 7.5 கிமீக்கு மக்கள் வெள்ளம்.. இது ஜனவரி 22, 2024 அன்று மாலை 6 மணிக்கு எடுக்கப்பட்டது.
X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா, நேற்று (ஜனவரி 22) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அயோத்தியில் 7.5 கிமீ தொலைவுக்கு மக்கள் வெள்ளம் குவிந்துள்ளதைப் பாருங்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் உட்பட வலதுசாரிகள் பலரும் தங்களது பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.

Archive link
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது அயோத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதையும், இந்த புகைப்படத்தில் உள்ள காட்சிகளைக் கொண்ட வீடியோ, கடந்த 2023 ஜூன் மாதத்திலிருந்தே இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதையும் அறிய முடிந்தது.

மேலும், NDTV இன் இணையதளத்தில் பரவி வரும் இதே புகைப்படம் "ஜெகன்நாத் ரத யாத்திரை" என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலம் பூரியில் நடைபெறும் இந்த ஜெகன்நாத் ரத யாத்திரை குறித்து தேடியதில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஜெகன்நாத் ரத யாத்திரை நடைபெறுகிறது.

இதே போன்று The Shillong Times என்ற வலைத்தளப்பக்கத்திலும், இதே புகைப்படம் "ஜெகன்நாத் ரத யாத்திரை" என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வதந்திகள் மூலமாக அரசியல் செய்யும் தலைவர்கள் !
முடிவு:
நம் தேடலில், ஒரிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகன்நாதர் கோயில் கூட்டத்தை, அயோத்திக்கு வந்த கூட்டம் என்று கூறி பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் உட்பட பலரும் தவறாகப் பரப்பி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
இந்த புகைப்படத்தை பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் உட்பட வலதுசாரிகள் பலரும் தங்களது பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.

Archive link
உண்மை என்ன?
பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது அயோத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதையும், இந்த புகைப்படத்தில் உள்ள காட்சிகளைக் கொண்ட வீடியோ, கடந்த 2023 ஜூன் மாதத்திலிருந்தே இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதையும் அறிய முடிந்தது.

மேலும், NDTV இன் இணையதளத்தில் பரவி வரும் இதே புகைப்படம் "ஜெகன்நாத் ரத யாத்திரை" என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலம் பூரியில் நடைபெறும் இந்த ஜெகன்நாத் ரத யாத்திரை குறித்து தேடியதில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஜெகன்நாத் ரத யாத்திரை நடைபெறுகிறது.

இதே போன்று The Shillong Times என்ற வலைத்தளப்பக்கத்திலும், இதே புகைப்படம் "ஜெகன்நாத் ரத யாத்திரை" என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வதந்திகள் மூலமாக அரசியல் செய்யும் தலைவர்கள் !
முடிவு:
நம் தேடலில், ஒரிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகன்நாதர் கோயில் கூட்டத்தை, அயோத்திக்கு வந்த கூட்டம் என்று கூறி பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் உட்பட பலரும் தவறாகப் பரப்பி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.