YouTurn

இந்துக்கள் பாதிக்கப்படுவது குறித்து பிரியங்கா காந்தி குரல் கொடுப்பதில்லை எனப் பரவும் தவறான தகவல்!

இந்துக்கள் பாதிக்கப்படுவது குறித்து பிரியங்கா காந்தி குரல் கொடுப்பதில்லை எனப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பாலஸ்தீன மக்கள் மட்டுமின்றி வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் பாதிக்கப்படுவது குறித்தும் பிரியங்கா காந்தி குரல் எழுப்பியுள்ளார்.

பரவிய செய்தி

பிரியங்கா  வயநாடு ஓடுனது இதுக்குதான் எப்போதும் முஸ்லிம்கள் மேல் தான் அதிக அக்கறை பங்களாதேஷில் இருக்கும் இந்துக்கள் மீது பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டு தொடர்ந்து படுகொலைகளும் கற்பழிப்புகளும் நடந்து கொண்டுள்ளன. ஆனால் அதற்கு  கொஞ்சம் கூட ஒரு கருணை, இறக்கம்  காட்ட மாட்டார்கள்,,

image.png

X link

விரிவான விளக்கம்

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அம்மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி பை ஒன்றை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு சென்றார். 

அந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, முஸ்லிம்களுக்கு ஆபத்து என்றால் மட்டும் பிரியங்கா காந்தி குரல் கொடுக்கிறார். வங்கதேசத்தில் பாதிக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவாகப் பேச மாட்டார் என வலதுசாரிகள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


உண்மை என்ன?


கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமெனக் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக ‘மோடி - அதானி’ படங்கள் அச்சடிக்கப்பட்ட பையுடன் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நூதனமான போராட்டத்தைக் கடந்த 10ம் தேதி முன்னெடுத்தனர். 


பிறகு டிசம்பர் 16ம் தேதி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, ’பாலஸ்தீனம்’ என அச்சடிக்கப்பட்ட பையைக் கொண்டுவந்தார். 


image.png

அதற்கடுத்த நாளான டிசம்பர் 17ம் தேதி வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலில் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் வகையில் பை கொண்டுவந்துள்ளார். மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வங்கதேசத்தில் பாதிக்கப்படும் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக போராட்டமும் செய்துள்ளனர். இது தொடர்பான செய்திகளும் வெளியாகியுள்ளது.

#WATCH | Delhi: Opposition MPs carry placards and tote bags displaying messages against atrocities on minorities in Bangladesh, and protest at the Parliament premises. pic.twitter.com/WLTAmBmyL0

— ANI (@ANI) December 17, 2024

இப்படிப் பாதிக்கப்பட்ட மக்கள் பற்றிய கவனத்தை ஈர்க்கும் விதமான செயலில் பிரியங்கா காந்தி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆனால், முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டால் மட்டும் பிரியங்கா அக்கறை காட்டுவதாக வலதுசாரிகள் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். 


வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் மீது தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தது. இத்தகைய சம்பவத்துடன் தொடர்புப்படுத்திப் பொய் செய்திகளும் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அவற்றின் உண்மைத்தன்மை குறித்து யூடர்னில் கட்டுரை வெளியிட்டுள்ளோம்.


மேலும் படிக்க:   வங்கதேசத்தில் இஸ்கான் கோவில் மாட்டின் மீது தாக்குதல் நடத்தியதாகப் பரவும் பொய் செய்தி!


முடிவு: 


முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் மட்டும் பிரியங்கா காந்தி அக்கறை காட்டுவதாகப் பரவும் தகவல் தவறானது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் பிரியங்கா காந்தி பேசியுள்ளார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க