யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜூன் 23, 2025 அன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் விழுந்து வணங்கிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என்று வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது prokerala. Com என்ற ஊடகப்பக்கத்தில் ஜூன் 23,2025 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படம் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.

அதே போல் ”Operation Sindoor met all objectives, instilled fear in terrorists, says Rajnath Singh” என்ற தலைப்பில் The Hindu ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்தது. புது டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலும் பரவி வரும் வீடியோவில் உள்ள அதே புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

எனவே பரவி வருவது "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பது தெளிவானது.
இதையடுத்து பரவி வரும் வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து, was it ai என்ற இணையதளப்பக்கத்தில் இது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பரவி வரும் வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.

முடிவு:
நம் தேடலில், ஜூன் 23, 2025 அன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.
