YouTurn

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் வங்கி கடனை தள்ளுபடி செய்த ஒன்றிய அரசு எனப் பரவும் தவறான செய்தி!

நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் வங்கி கடனை தள்ளுபடி செய்த ஒன்றிய அரசு எனப் பரவும் தவறான செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜகவுக்கு கொடுத்ததன் மூலம், நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் வங்கியிலிருந்து அவர் பெற்ற 18 கோடி ரூபாய் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்தது என்று கூறி சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.

பரவிய செய்தி

நடிகையும், ஐபிஎல் கிரிக்கெட் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முதலாளியுமான ப்ரீத்தி ஜிந்தா வங்கியில் வாங்கிய 18 கோடி ரூபாயை திருப்பித் தரத் தேவையில்லை என்று ஒன்றிய அரசு அவரது வங்கிக்கடனை தள்ளுபடி செய்து விட்டது.


X Link

விரிவான விளக்கம்

நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜகவுக்கு கொடுத்ததன் மூலம், நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் வங்கியிலிருந்து அவர் பெற்ற 18 கோடி ரூபாய் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்தது என்று கூறி சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. 


இதனை கேரள காங்கிரஸ் உட்பட பலரும் , “அந்த வங்கி கடந்த வாரம் நிதி நெருக்கடியில் சிக்கியது. முதலீட்டாளர்கள் தற்போது தங்கள் பணத்திற்காக வீதிகளில் நிற்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டு பரப்பி வருகின்றனர். 




உண்மை என்ன?


பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து முப்பை மாநகர காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள விளக்கம் குறித்து “Abp Live News” பிப்ரவரி 25 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில்,  “நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் பெயர் தற்போதைய எந்த விசாரணைகளிலும் இடம்பெறவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ப்ரீத்தி ஜிந்தா தொடர்பாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. மேலும் அவரது வழக்கு தற்போது நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவும் இல்லை” என்றும் கூறியுள்ளனர். 



இதே போன்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், இது குறித்து கூறுகையில், “இல்லை, எனது சமூக ஊடக கணக்குகளை நானே இயக்குகிறேன், போலி செய்திகளை வெளியிட்டதற்காக உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன்! யாரும் எனக்காக எதையும் அல்லது எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை. 


இங்கு ஒரு தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கப்பட்டு முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டது. இந்த தகவல் எதிர்காலத்தில் தவறான புரிதல் ஏற்படாமல் இருக்கவும் மற்றவர்களுக்குத் தெளிவுபடுத்தவும் உதவும் என்று நம்புகிறேன்” என்று கூறி தனது மறுப்பை தெரிவித்துள்ளார். 



இதன் மூலம் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜகவுக்கு கொடுத்ததன் மூலம், நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் வங்கியிலிருந்து அவர் பெற்ற 18 கோடி ரூபாய் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்தது என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது. 


முடிவு:


நம் தேடலில், நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் 18 கோடி ரூபாய் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்ததாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.