YouTurn

பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் என வாட்ஸ்அப்பில் பரவும் போலியான தகவல்!

பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் என வாட்ஸ்அப்பில் பரவும் போலியான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பிரேக்கிங் நியூஸ்!  PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது. எங்கள் திட்டம் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்குத் திறந்திருக்கும், சொந்த மடிக்கணினிகளை வாங்க இயலவில்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஒன்று தேவை. விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, இடங்கள் குறைவாகவே உள்ளன!  விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே மடிக்கணினிகள் வரத் தொடங்கியுள்ளன. காலக்கெடுவை:04/29/2024 

விரிவான விளக்கம்

ஏழை எளியமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும்  சொந்தமாக மடிக்கணினி வாங்க முடியாதவர்களுக்கும் உதவும் வகையில் பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் ஓர் தகவல் பரப்பப்படுகிறது. 

இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ’04.29.2024’ எனக் குறிப்பிட்டு, லிங்க் ஒன்று பகிரப்படுகிறது. இதுபோல் லிங்க்-ஐ கிளிக் செய்தால் பணம் கிடைக்கும் என்றும் சில தகவல்களை பரப்புகின்றனர்.

உண்மை என்ன?

PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் குறித்து தேடியதில், அப்படி எந்தவொரு திட்டமும் ஒன்றிய அரசால் கொண்டு வரப்படவில்லை என்பதை அறியமுடிந்தது. மேலும், பரவக்கூடிய தகவலில் உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்ததில், அது போலியாக உருவக்கப்பட்டது என தெரியவந்தது.

மேலும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேடினோம். வாட்ஸ் அப்பில் பரவும் இத்தகவல் தொடர்பாக கடந்த 19ம் தேதியன்று அத்தளத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்ததை பார்க்க முடிந்தது.



அதில், பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் போலியானதுAICTEக்கு தொடர்பில்லாத திட்டங்கள் பற்றி தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் சில இணையதளங்களிலும் பரப்பப்படுகிறது. அவை AICTE-யின் கவனத்திற்கு வரும்போதெல்லாம் அது குறித்து விளக்கமும் அளித்துள்ளது. அப்படியான தகவல்களை மாணவர்கள் நிராகரியுங்கள். மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது அலுவலகத்தை தொடர்பு கொண்டோ தகவலை சரிபாருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதிலிருந்து பிரதம மந்திரி இலவச லேப்டாப் என பரவக் கூடிய தகவல் போலியானது என்பதை அறிய முடிகிறது. 



மேலும் இதேபோல் ’பாரதிய ஜனதா கட்சி இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.5,000  இலவசமாக வழங்கும்’ என்கிற தகவலும் பரப்பப்படுகிறது. அதுவும் போலியாக உருவாக்கப்பட்டது. இவ்வாறான தகவல்களை உண்மை என எண்ணி நம்பகத்தன்மையற்ற லிங்க்-களை கிளிக் செய்ய வேண்டாம்.

முடிவு :

நம் தேடலில், பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் என வாட்ஸ் அப்பில் பரவும் செய்தி தவறானது. அப்படி எந்த திட்டமும் இல்லையென அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க