YouTurn

பாஜக கூட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் எனப் பரவும் பாகிஸ்தான் வீடியோ!

பாஜக கூட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல் எனப் பரவும் பாகிஸ்தான் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பெண்களை அதுவும் தன் கட்சிப் பெண்கள் மீதே பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் பாஜகவினர். இந்தியாவின் மகள்களை சீரழிப்பதில் பாஜகவினருக்கு என்றுமே இன்பம் தான். இந்தியாவின் மகள்களை காப்பாற்ற பாஜகவை ஒழித்தால் மட்டுமே முடியும்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

2024 மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது. எனவே இந்தியா முழுவதுமே அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி 13 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


மேலும் பரவி வரும் வீடியோவில், கூட்டத்தின் நடுவே நிற்கும் பெண், அருகில் இருக்கும் நபரால் பாலியல் ரீதியாக தாக்கப்படுவதையும் காண முடிகிறது. 


உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

Defence Forum India என்ற இணையதளத்தில் இதே வீடியோ 2012 இல், "பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஷெர்ரி ரெஹ்மானை பாலியல் ரீதியாகத் தாக்கினார்" என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 




Riaz Haq என்ற யூடியூப் பக்கத்திலும் இதே வீடியோ 2007 இல் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.

வீடியோவில் இருக்கும் பெண் யார் என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இவர் பெயர் ஷெர்ரி ரெஹ்மான் என்பதையும், இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் பத்திரிக்கையாளர் என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது. இதன் மூலம் பரவி வரும் வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.  



மேலும் படிக்க: பாகிஸ்தான் மத போதகர் யூதர்களுக்கு எதிராக பேசிய பொய்யால் மேடை இடிந்தது எனத் தவறாகப் பரவும் பழைய வீடியோ !

இதற்கு முன்பும் பாகிஸ்தான் குறித்து பரவிய பல செய்திகளை ஆய்வு செய்து, நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்ததாகப் பரவும் வதந்தி !

முடிவு:

நம் தேடலில், பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோவை, இந்தியாவில் பாஜக கட்சினர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டது என்று கூறி சமூக ஊடகங்களில் சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க