YouTurn

முதல்வர் ரேகா குப்தா ஆட்சியில் யமுனை ஆற்றின் நிலை எனப் பரவும் பழைய வீடியோ!

முதல்வர் ரேகா குப்தா ஆட்சியில் யமுனை ஆற்றின் நிலை எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய காணொளி

சரிபார்க்கப்பட்ட கூற்று

டெல்லியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் எனப் பரவும் வீடியோ, கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்தே ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

கெஜ்ரிவாலை விட டெல்லி முதல்வர் ரேகா குப்தா பரவாயில்லை, யமுனா ஜியை சுத்தம் செய்ய இலவச ஷாம்பு கலந்து விட்டுள்ளார். 



X Link | Archive Link

விரிவான விளக்கம்

டெல்லி முதல்வர் ரேகா குப்தா ஆட்சியில், ரசாயன நுரை அதிகமாகக் காணப்படும் யமுனை ஆற்றில் பெண்கள் குளிப்பதைப் பாருங்கள் என்று கூறி 26 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில் இது தற்போது எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது. 


டெல்லியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் எனப் பரவும் வீடியோ, கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்தே ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக இது குறித்து “News18 தமிழ்” ஊடகப் பக்கத்தில் கடந்த 2024 டிசம்பர் 10 அன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 


அதில், "மனித சுயநலம் மற்றும் மாசுபாடு காரணமாக பல புனித நதிகள் மாசுபடுகின்றன. குறிப்பாக தற்போது டெல்லியில் உள்ள யமுனை நதி மாசுபாட்டால் விஷ நுரையால் நிரம்பியுள்ளது. சத் பூஜையின்போது, ​​யமுனா நதியின் நிலை மோசமடைந்து காணப்பட்டது. இந்த பூஜையின்போது, ​​பக்தர்கள் நச்சு நுரை நிரம்பிய தண்ணீரின் கரையில் நின்று சூரிய கடவுளுக்கு பிரார்த்தனை செய்கிறார்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



இதே போன்று “Asianetnewsenglish” யூடியூப் பக்கத்திலும் இதே வீடியோ கடந்த 2024 நவம்பரில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது. 



இதன் மூலம், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியில் நடைபெற்ற சம்பவத்தை, முதல்வர் ரேகா குப்தா ஆட்சியில் தற்போது நடைபெற்ற சம்பவம் என்று கூறி தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், டெல்லியில் நுரை பொங்கும் யமுனையில் குளித்த பெண்கள் எனப் பரவும் வீடியோ, கடந்த 2024 ஆம் ஆண்டிலிருந்தே ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க