YouTurn

ஈரானில் இருந்து இஸ்லாமியர்களை மீட்ட பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

ஈரானில் இருந்து இஸ்லாமியர்களை மீட்ட பிரதமர் மோடி என்று பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2025 ஜூனில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அடுத்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்து'வைத் தொடங்கியது. அதன்படி மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்களை ஈரானில் இருந்து தனி விமானம் மூலம் அழைத்து வந்தபோது, எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.

பரவிய செய்தி

பாரத மண்ணை வணங்கிய முஸ்லீம்கள் ஈரானிலிருந்து மீட்ட மோடி | கண்ணீர் மல்க நன்றி

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

ஈரானில் சிக்கிய முஸ்லிம்களை தற்போது பாதுகாப்பாக மீட்ட பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி ஸ்ரீ டிவி ஊடகத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டப்படி ஒரு இஸ்லாமிய பெண் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் அந்த வீடியோவை, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடினோம். அப்போது NDTV ஊடகத்தில், “Indian Evacuees Chant "Hindustan Zindabad" As 2nd Batch Returns From Iran” என்ற தலைப்பில் ஜூன் 21, 2025 அன்று பரவி வரும் வீடியோவில் உள்ள screenshot உடன் செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அடுத்து, அங்கு வான்வழிப் போர் தொடங்கியது. இந்நிலையில் இந்தியா 'ஆபரேஷன் சிந்து'வைத் தொடங்கியது. அதன்படி மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்களை ஈரானில் இருந்து இந்தியா ஒரு தனி விமானம் மூலம் அழைத்து வந்தது. அப்போது டெல்லி விமான நிலையம் முழுவதும் "இந்துஸ்தான் ஜிந்தாபாத்" என்ற கோஷங்கள் எதிரொலித்தன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் DD News ஊடகப்பக்கத்திலும், ஜூன் 23, 2025 அன்று பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதிலும் ஆப்ரேஷன்சிந்து திட்டத்தின் கீழ் ஈரானின் மஷ்ஹத் நகரிலிருந்து 285 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இதன் மூலம் ஈரானிலிருந்து மீட்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,713ஆக உயர்ந்துள்ளது. 'இந்துஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழக்கமிட்டபடி வந்தவர்களை, மத்திய இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா வரவேற்றார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதராங்களின் அடிப்படையில், கடந்த 2025 ஜூனில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதை அடுத்து, இந்தியா 'ஆபரேஷன் சிந்து'வைத் தொடங்கியது. அதன்படி மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்களை ஈரானில் இருந்து தனி விமானம் மூலம் அழைத்து வந்தபோது,  எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. இதை ஈரானில் சிக்கிய முஸ்லிம்களை தற்போது பாதுகாப்பாக மீட்ட பிரதமர் நரேந்திர மோடி என்று கூறி தவறாகத் திரித்துப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க