YouTurn

பெரியாரை செருப்பால் அடித்த மூதாட்டி எனப் பரவும் பிரெஞ்சு புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட மூதாட்டி புகைப்படம்!

பெரியாரை செருப்பால் அடித்த மூதாட்டி எனப் பரவும் பிரெஞ்சு புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்ட மூதாட்டி புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பகுத்தறிவு பகலவன் என அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியாரை முதன்முதலில் செருப்பால் அடித்த மூதாட்டி என பெரியார் புகைப்படமும் ஒரு மூதாட்டியின் புகைப்படமும் சேர்த்து சமூக ஊடகப்பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.

பரவிய செய்தி

சிங்கப்பென்னே .... உனக்கெல்லாம் இது சாதாரணமே.

image.png


X link




விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் இன்றியமையாத தலைவர்களில் ஒருவர் பெரியார். இன்றும் அவரது கருத்தியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றால் அது மிகையாகாது. பகுத்தறிவு பகலவன் என அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பெரியாரை முதன்முதலில் செருப்பால் அடித்த மூதாட்டி என பெரியார் புகைப்படமும் ஒரு மூதாட்டியின் புகைப்படமும் சேர்த்து சமூக ஊடகப்பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.


உண்மை என்ன ?


பரவிவரும் புகைப்படத்தை “Google Reverse Image Search” மூலம் ஆய்வு செய்து பார்த்ததில் dreamstime என்ற இணையதளப்பக்கத்தில் பரவக்கூடிய மூதாட்டியின் புகைப்படத்தைப் பார்க்க முடிந்தது. 


image.png



அந்த புகைப்படத்துக்கு கீழ் இருந்த விளக்கத்தில் (Description) கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
"Portrait of an Indian old senior poor woman with saree. PONDICHERY, PUDUCHERRY, TAMIL NADU, INDIA - SEPTEMBER CIRCA, 2017. Portrait of an unidentified Indian old senior poor woman with saree in the street, looking serious sad" என்றிருந்தது.

மேலும், இதே  தகவல் shutterstock என்ற இணையதளத்திலும் பதிவு செய்திருப்பதை பார்க்க முடிந்தது. கேத்தரின் (CatherineLprod ) என்ற பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம்தான் இது என்பதையும் அறியமுடிந்தது. 

2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை சிலர் தவறான தகவலோடு பயன்படுத்திவருகின்றனர். 

பெரியாரின் பிறந்தாளில் இப்படியான பொய் செய்திகள் வருவது வழக்கம். இதனை சரிபார்த்து நம் யூடர்ன் தரப்பில் கட்டுரைகளை எழுதியுள்ளோம்.

மேலும் படிக்க : திருக்குறளை மலத்துடன் ஒப்பிட்டு பெரியார் பேசியதாகச் சாட்டை துரைமுருகன் சொன்ன பொய்

மேலும் படிக்க : பெரியார் மணியம்மைக்கு தாலிக் கட்டிய புகைப்படமா ?| உண்மை என்ன ?


முடிவு:

நம் தேடலில் 2017ஆம் ஆண்டு ஒரு பிரெஞ்சு புகைப்படக்காரரால் எடுக்கப்பட்ட ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை முதன்முதலில் பெரியாரை செருப்பால் அடித்த மூதாட்டி தவறான தகவலோடு பரவி வருகிறது என்பதை அறியமுடிகிறது.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க