YouTurn

காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று பரவும் பழைய புகைப்படம்!

 காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று பரவும் பழைய புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பழைய புகைப்படம்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று கூறி தவறாகப் பரப்புகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு கொல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அமைப்புகள் நடத்திய பேரணியின் பழைய புகைப்படம் இது.

பரவிய செய்தி

காங்கிரஸ் எங்கே... காங்கிரஸ் இனி அவ்வளவு தான்... காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று கூறியவர்களுக்கு.. 



Facebook Link | Archive Link 

விரிவான விளக்கம்

டெல்லியில் டிசம்பர் 14 அன்று வாக்குத் திருட்டுக்கு எதிராக ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பரவி வரும் அப்பதிவில், “காங்கிரஸ் இனி அவ்வளவு தான் என்று கூறியவர்களுக்கு, காங்கிரஸ் கட்சிக்காக கூடிய கூட்டம்“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Archive Link 


உண்மை என்ன? 


பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில் இது சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதை அறிய முடிந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்தே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டிருந்தது. 



“Peoples Democracy“ ஊடகப் பக்கத்தில், பரவி வரும் புகைப்படம் கடந்த 2019 பிப்ரவரி 06 அன்று “மாற்றுக் கொள்கைகள் மற்றும் மாற்று அரசியலை வலியுறுத்துவதற்காக, இடதுசாரி கட்சிகளின் அழைப்பின் பேரில், பிப்ரவரி 3 ஆம் தேதி கொல்கத்தாவின் பிரிகேட் பரேட் மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர்” என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது. 



இதே போன்று “Alamy“ இணையப்பக்கத்திலும் பரவி வரும் புகைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டிருந்தது. 



முடிவு: 


நம் தேடலில் டெல்லியில் டிசம்பர் 14 அன்று வாக்குத் திருட்டுக்கு எதிராக ராம் லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் பரவி வரும் புகைப்படத்தை காங்கிரஸ் கட்சிக்கு கூடிய கூட்டம் என்று கூறி தவறாகப் பரப்புகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு கொல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அமைப்புகள் நடத்திய பேரணியின் பழைய புகைப்படம் இது என்பதை தெளிவாக அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க