YouTurn

பிற மாநில இரயில் நிலையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறதா? நாம் தமிழரின் இனவெறி பதிவு!

பிற மாநில இரயில் நிலையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறதா? நாம் தமிழரின் இனவெறி பதிவு!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் இருக்கும் பிற மாநில நகரங்களின் இரயில் நிலைய பெயர் பலகைகள் பயணிகள் வசதிக்காக தமிழில் எழுதப்படுகிறது.

பரவிய செய்தி

தமிழ்நாட்டில் உள்ள மலையாளம், தெலுங்கு; கேரளாவில் ஆந்திராவில் தமிழ் இல்லை;

இனவெறி கொள் தமிழா. 



Link / Archive Link 

விரிவான விளக்கம்

திருத்தணி, பொள்ளாச்சி, பாலக்காடு, திருப்பதி ஆகிய இரயில் நிலையங்களின் பெயர் பலகைகளின் புகைப்படத்தை பகிர்ந்து, இதில் திருத்தணி,  பொள்ளாச்சி ஆகிய தமிழ்நாட்டு நகரங்களில் தெலுங்கிலும் மலையாளத்திலும் பெயர் பலகைகள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஆந்திராவின் திருப்பதி மற்றும் கேரளாவின் பாலக்காடு ஆகிய நகரங்களில் இரயில் நிலைய பெயர் பலகைகளில் தமிழ் இல்லை என்று ‘நாம் தமிழர் கட்சி’யின் ஆதரவாளரால் பரப்பப்படுகிறது. 


அதாவது, தமிழ்நாட்டில் உள்ள இரயில் நிலைய பெயர் பலகைகளில் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் உள்ளன; ஆனால் கேரளா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள இரயில் நிலையங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது என்ற கண்ணோட்டத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?


பொள்ளாச்சி நகரம் தமிழ்நாடு - கேரளா எல்லையோரத்தில் இருக்கிறது. அதேபோல், திருத்தணி தமிழ்நாடு - ஆந்திரா எல்லையோரத்தில் இருக்கும் நகரமாகும். இதனால் அவற்றின் இரயில் நிலைய பெயர் பலகைகளில் முறையே மலையாளத்திலும் தெலுங்கிலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால் திருப்தியும் பாலக்காடும் தமிழ்நாடு எல்லையோரத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் கேரளாவிலும் ஆந்திராவிலும் தமிழ்நாடு எல்லையாரங்களில் உள்ள நகரங்களின் இரயில் நிலைய புகைப்படங்களை தேடினோம். அதில் திருத்தணிக்கு அருகில் உள்ள நகரிஎன்ற நகரத்தில் இரயில் நிலைய பெயர் பலகை தமிழ் எழுதப்பட்டுள்ளதை காணமுடிந்தது.



அதேபோல், கேரளாவில் உள்ள பாறைசாலா என்ற நகரம் பொள்ளாச்சி அருகிலும்  ‘முதலமடை என்ற கேரள கிராமம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை அருகிலும் உள்ளது. இந்த ஊர்களின் இரயில் நிலைய பெயர் பலகைகளில் தமிழிலிலும் எழுதப்பட்டுள்ளதை காணமுடிகிறது.



இதிலிருந்து தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் இருக்கும் நகரங்களின் இரயில் நிலைய பெயர் பலகைகளில் பயணிகள் வசதிக்காக தமிழ் எழுதப்படுவதைக் காணமுடிகிறது.


முடிவு: 


ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் உள்ள இரயில் நிலைய பெயர் பலகைகளில் தமிழ் மொழி எழுதப்படுவதில்லை என்று ‘நாம் தமிழர் கட்சி’யின் ஆதரவாளரால் இனவெறி கண்ணோட்டத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க