YouTurn

மக்கள் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து மோடி கை அசைப்பதாகப் பரவும் தவறான தகவல்!

மக்கள் யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து மோடி கை அசைப்பதாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வீடியோ quality குறைவாக இருப்பதால் தூரத்தில் உள்ள மக்கள் தெரியவில்லை.

பரவிய செய்தி

இது என்ன பிரமாதம். எங்க கிட்ட ஒரு பெசல் ஐட்டம் இருக்கி…. இதோ.. உங்கள் பார்வைக்கு…


image.png


X link

விரிவான விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் யாரும் இல்லாத இடத்தை பார்த்து கை அசைத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


https://x.com/i/web/status/1853089198615736399


உண்மை என்ன? 


பரவக்கூடிய இதே வீடியோ, 2021 ஏப்ரல் 1ஆம் தேதி ‘Rohan Dua’ என்ற பத்திரிகையாளரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ’ஜெய்நகர் (Jaynagar) மேற்கு வங்காளம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதே வீடியோவை பாஜக-வின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் அதே தேதியில் பதிவிட்டுள்ளது. 


https://x.com/i/web/status/1377573335781937156


பரவக்கூடிய வீடியோவைக் காட்டிலும் இந்த வீடியோ நல்ல quality-ல் உள்ளது. அதில், தூரத்தில் மக்கள் இருப்பதையும் மோடி கை அசைக்கும்போது அவர்கள் சத்தமிடுவதையும் காணவும் கேட்கவும் முடிகிறது.


மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி அம்மாநிலத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்படி ஜெய்நகர் பகுதியில் நடந்த பிரச்சாரத்திற்கு வருகை தந்தபோது எடுத்ததுதான். தற்போது பரவக்கூடிய வீடியோ Quality குறைவாக உள்ள வீடியோவில் தூரத்தில் நின்றுள்ள மக்கள் தெரியவில்லை. எனவே, யாரும் இல்லாத இடத்தில் கூட மோடி கை அசைக்கிறார் எனத் தவறானத் தகவலைப் பரப்புகின்றனர். 


ஜெய்நகர் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் மோடி பேசிய முழு வீடியோ அவரது யூடியூப் பக்கத்தில் உள்ளது. அந்நிகழ்ச்சியில் திரளாக மக்கள் கலந்து கொண்டுள்ளனர். 



இதற்கு முன்னரும் மோடி குறித்து இதே மாதிரியான பொய் செய்திகள் பரப்பப்பட்டன. அதுகுறித்த உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: யாருமில்லாத நடுவானில் கை அசைத்த பிரதமர் மோடி எனத் தவறாகப் பரவும் வீடியோ !

மேலும் படிக்க: யாரும் இல்லாத இடத்தை பார்த்து மோடி கையசைப்பதாகப் பரவும் தவறான தகவல்!


முடிவு: 


யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து பிரதமர் மோடி கை அசைப்பதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. அந்த வீடியோவில் தூரத்தில் மக்கள் நின்று கொண்டுள்ளனர். வீடியோ quality குறைவாக இருப்பதால் மக்கள் தெரியவில்லை.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.