
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பிரதமர் நரேந்திர மோடி பாலத்தின் மேல் நின்று கொண்டு யாரும் இல்லாத இடத்தில் கையசைப்பதாக வீடியோ ஒன்றை திமுக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இதே வீடியோ 'ANI' எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 2024, பிப்ரவரி 25ம் தேதி பதிவிட்டுள்ள அந்த வீடியோ ஓகா மற்றும் பேட் துவாரகா பகுதியை இணைக்கும் சுதர்சன் சேது திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்த போது எடுக்கப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள ஓகா நிலப்பரப்பையும் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் 2.32 கி.மீ. நீளமுள்ள சுதர்சன் சேது கேபிள் பாலத்தைப் பிரதமர் மோடி கடந்த 25ம் தேதி திறந்து வைத்தார். சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இப்பால திறப்பு விழாவில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ நரேந்திர மோடியின் யூடியூப் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களில் பாலத்தின் மேல் நின்று கொண்டு மோடி கையசைக்கும் போது தூரத்தில் உள்ள படகுகளில் மக்கள் இருப்பதையும், அவர்கள் பூக்களை வீசுவதையும் காண முடிகிறது. அம்மக்களை பார்த்துத்தான் மோடி கையசைத்துள்ளார். அந்த வீடியோவை மோடி யாரும் இல்லாத இடத்தில் கையசைத்ததாகத் தவறாகப் பரப்புகின்றனர்.
மேலும் படிக்க : குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வணக்கம் சொல்லும்போது பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை எனப் பரவும் தவறான தகவல் !
இதேபோல் பிரதமர் மோடி குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : யாருமில்லாத நடுவானில் கை அசைத்த பிரதமர் மோடி எனத் தவறாகப் பரவும் வீடியோ !
முடிவு:
பிரதமர் மோடி யாரும் இல்லாத இடத்தில் கையசைப்பதாகப் பரவும் வீடியோ தவறானது. சுதர்சன் சேது பாலத்தின் மீது இருந்து மோடி கையசைக்கையில் தூரத்தில் உள்ள படகுகளில் மக்கள் இருப்பதைக் காண முடிகிறது.
யாருக்கு டீ ஆத்துறான்
இந்த கோமாளி
இங்கு ஒரு கோமாளி ஆடு இப்படி தான் சுத்திட்டு இருக்கான். pic.twitter.com/7ZT3maqJRc
— தூய துறவி (@iam_Vsk) February 25, 2024
உண்மை என்ன ?
பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இதே வீடியோ 'ANI' எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 2024, பிப்ரவரி 25ம் தேதி பதிவிட்டுள்ள அந்த வீடியோ ஓகா மற்றும் பேட் துவாரகா பகுதியை இணைக்கும் சுதர்சன் சேது திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்த போது எடுக்கப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi at Sudarshan Setu, country’s longest cable-stayed bridge of around 2.32 km, connecting Okha mainland and Beyt Dwarka. pic.twitter.com/uLPn4EYnFM
— ANI (@ANI) February 25, 2024
குஜராத்தில் உள்ள ஓகா நிலப்பரப்பையும் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் 2.32 கி.மீ. நீளமுள்ள சுதர்சன் சேது கேபிள் பாலத்தைப் பிரதமர் மோடி கடந்த 25ம் தேதி திறந்து வைத்தார். சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இப்பால திறப்பு விழாவில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ நரேந்திர மோடியின் யூடியூப் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களில் பாலத்தின் மேல் நின்று கொண்டு மோடி கையசைக்கும் போது தூரத்தில் உள்ள படகுகளில் மக்கள் இருப்பதையும், அவர்கள் பூக்களை வீசுவதையும் காண முடிகிறது. அம்மக்களை பார்த்துத்தான் மோடி கையசைத்துள்ளார். அந்த வீடியோவை மோடி யாரும் இல்லாத இடத்தில் கையசைத்ததாகத் தவறாகப் பரப்புகின்றனர்.
மேலும் படிக்க : குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வணக்கம் சொல்லும்போது பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை எனப் பரவும் தவறான தகவல் !
இதேபோல் பிரதமர் மோடி குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : யாருமில்லாத நடுவானில் கை அசைத்த பிரதமர் மோடி எனத் தவறாகப் பரவும் வீடியோ !
முடிவு:
பிரதமர் மோடி யாரும் இல்லாத இடத்தில் கையசைப்பதாகப் பரவும் வீடியோ தவறானது. சுதர்சன் சேது பாலத்தின் மீது இருந்து மோடி கையசைக்கையில் தூரத்தில் உள்ள படகுகளில் மக்கள் இருப்பதைக் காண முடிகிறது.
