YouTurn

ஹரியானாவில் காலி இருக்கைகளுடன் உரை நடத்திய பிரதமர் மோடி எனப் பரவும் தவறான செய்திகள்!

ஹரியானாவில் காலி இருக்கைகளுடன் உரை நடத்திய பிரதமர் மோடி எனப் பரவும் தவறான செய்திகள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

ஹரியானா! இப்போது பாஜக ஆளும் மாநிலம்! அங்கே மோடியோட வரலாறு காணாத தேர்தல் பிரசாரக் கூட்டம்!அப் கி பார்! மோடிக்கோ நக்கிகிட்டு போகுது பார்! காலி நாற்காலிகளைப் பார்த்து வீர உரை ஆற்றும்! நரேந்திரதாஸ், தாமோதரதாஸ் மோடி! 04 ஜூன் க்கு அப்புறம் மோடிக்கு திஹார் உறுதி!



X Link | Archive Link

விரிவான விளக்கம்

2024 மக்களவைத் தேர்தல் தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு தலைவர்கள் நாடு முழுவதும் தங்களது பிரச்சாரத்தை தீவிரமாக தொடர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவில் ஒரு கூட்டத்தில் காலி நாற்காலிகளை பார்த்து உரை ஆற்றியதாகக் கூறி 27 வினாடிகள் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே வீடியோ மே 01 அன்று புனேவில் எடுக்கப்பட்டது என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது.



எனவே இது குறித்து மேலும் ஆய்வு செய்து பார்த்தோம். பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் முழு பகுதி ஏப்ரல் 29 அன்று "பிரதமர் மோடி நேரலை | மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பொதுக்கூட்டம் | லோக்சபா தேர்தல் 2024" என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் சரியாக 54:23 நிமிடத்தில் மோடி பேசியிருப்பது, பரவி வரும் வீடியோவுடன் சரியாக பொருந்தியது.



இதன் மூலம் மாகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிய பழைய பிரச்சார வீடியோவை, ஹரியானாவில் தற்போது நடந்தது என்று கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிந்தது.

மேலும் புனே பிரச்சாரக் கூட்டத்தில் மோடி உரையாற்றிய போது, மக்கள் கூட்டமாக கலந்து கொண்டுள்ளதையும் வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.



முடிவு:

நம் தேடலில், ஹரியானாவில் காலி இருக்கைகளுடன் உரை நடத்திய பிரதமர் மோடி என்று பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க