யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.
பரவிய செய்தி
டெல்லி ஜந்தர் மந்தரில் தேசவிரோதிகளை கண்டறிந்து அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று அறிவிப்பு தொடர்ந்து...
மண்டியிட்டு கதறினான் கரப்பான் பூச்சி அபிஜித் தீப்கே..

விரிவான விளக்கம்
பாஜக ஆட்சியில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தது போன்ற குளறுபடிகளை கண்டித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டம் நடத்தியது. ஜுலை 20ஆம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற நோக்கி பேரணி செல்ல முற்பட்டதை தொடர்ந்து டெல்லி போலீஸ் போராட்டக்காரர்கள் மீது மூர்க்கமாக தடியடி நடத்தியது.
இந்நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று டெல்லி போலீஸ் அறிவித்ததாகவும், இந்த அறிவிப்பை திரும்பப் பெறுமாறு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே டெல்லி போலீஸாரின் காலில் விழுந்து கெஞ்சியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிமுகவைச் சேர்ந்தவரால் பரப்பப்படுகிறது.
அட அட அட ஆனந்தமே 😍
டெல்லி ஜந்தர் மந்தரில் தேசவிரோதிகளை கண்டறிந்து அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று அறிவிப்பு தொடர்ந்து...
மண்டியிட்டு கதறினான் கரப்பான் பூச்சி அபிஜித் தீப்கே...😂
பயமா இருக்கா டா தேச விரோதியே இனி தான் பயங்கரமா இருக்கும்...🔥
நாட்டை துண்டாடட நினைக்கும்… pic.twitter.com/kpnkjb4mll
உண்மை என்ன?
பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’The Hindu’ ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோ இருப்பதைக் காணமுடிந்தது.
அதில், ’டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மாணவர்களுக்காக தற்காலிக கூடாரங்கள் (Tent) அமைக்க அனுமதிக்குமாறு கேட்டு டெல்லி போலீஸிடம் அபிஜீத் தீப்கே கெஞ்சியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், ’ABP Live’ செய்தித்தளத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ளது செய்தியில், ‘உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்கும் பொருட்டு ஜந்தர் மந்தருக்குள் தார்பாய்களை எடுத்து வந்த மாணவிகளை ஆண் போலீஸார் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டதாகவும், அவர்களை தார்பாய்களைக் கொண்டு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு அபிஜீத் தீப்கே போலீஸாரின் காலில் விழுந்து கேட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது.
This video has been blocked by the Govt in India.
What was objectionable in this video? I was just pleading to the police to allow us set up tents for rain. pic.twitter.com/u2gd3zJYbW
மேலும், கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு போலீஸார் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் இருந்து இந்திய அரசு நீக்கியுள்ளதாகவும் அபிஜீத் தீப்கே தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது.
# Fact Check
The viral claim is misleading. No such decision has been announced to cancel the passports of CJP protestors. Citizens are advised not to share or amplify misleading posts and to rely only on official information.@VIKRAMPRATAPSIN
கூடுதலாக ‘ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் கலந்து கொண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று எந்த முடிவும் டெல்லி போலீஸால் எடுக்கப்படவில்லை’ என்று கடந்த ஜூலை 23ஆம் தேதி டெல்லி போலீஸ் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளதையும் காணமுடிகிறது.
முடிவு:
நீட் தேர்வு தொடர்பாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அபிஜீத் தீப்கே போலீஸ் காலில் விழுந்து கெஞ்சியதாக திரிக்கப்பட்ட தவறான தகவல் பரப்பப்படுகிறது.