யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டது ஜூன் 12. ஆனால், ஜூன் 9 அன்றே, 'யாஷஸ்வி ஷர்மா' என்கிற விமானப் பணிப்பெண் இந்த வீடியோவை "ULH விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஊக்கமாக உள்ளோம்" என்று குறிப்பிட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ’ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787- 8 டிரீம்லைனர்’ விமானம் விபத்திற்குள்ளானதில், அதில் இருந்த 242 பேரில் 241 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா குழுவினரின் கடைசி வீடியோ என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது யாஷ்ஸ்வி ஷர்மா என்கிற விமானப் பணிப்பெண் இந்த வீடியோ, "ULH விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஊக்கமாக உள்ளோம்" என்று குறிப்பிட்டு, ஜூன் 9 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், அந்த பதிவின் comment பகுதியில் ”தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், மும்பையில் இருப்பதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து அவர் ஜூன் 9ஆம் தேதியன்று பதிவிட்ட வீடியோவை, அகமதாபாத் விபத்துடன் தொடர்புபடுத்தி பரப்பப்படுவதை கண்டித்து “போலியான செய்திகளை பரப்ப வேண்டாம்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விபத்தில் பலியான ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் குறித்த விவரங்கள் Times Of Indiaவின் ஊடகப்பக்கத்தில் வெளியாகி இருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் யாஷ்ஸ்வி ஷர்மாவின் பெயர் இடம்பெறவில்லை என்பதை காணமுடிந்தது.

முடிவு:
அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்டது ஜூன் 12. ஆனால், ஜூன் 9 அன்றே, 'யாஷஸ்வி ஷர்மா' என்கிற விமானப் பணிப்பெண் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது தெரியவந்தது. எனவே இந்த வீடியோவிற்கும், அகமதாபாத் விமான விபத்திற்கும எந்த தொடர்புமில்லை.
