YouTurn

குஜராத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை எனப் பரவும் கொல்கத்தா வீடியோ!

குஜராத் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை எனப் பரவும் கொல்கத்தா வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது குஜராத்தில் நடந்த சம்பவம் அல்ல, கொல்கத்தாவில் கடந்த 2022-ல் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ.

பரவிய செய்தி

குஜராத் சூரத் நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சேகர் அகர்வாலின் வீடு இடி ரைடில் பெற்ற தொகையை எண்ண முடியாததை கண்டு அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி, கூடுதல் எண்ணும் இயந்திரத்தையும் கொண்டு வர வேண்டியதாயிற்று.  ஊழலை துடைக்க துடைப்பத்துடன் வெளியே வந்தவர்கள் நோட்டுகளை மாற்றுகிறார்கள்.


Facebook Link:

விரிவான விளக்கம்

குஜராத் சூரத் நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சேகர் அகர்வாலின் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தியபோது எடுக்கப்பட்ட வீடியோ என்று கூறி 36 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


மேலும் அப்பதிவில் “அமலாகத்துறையினர் சோதனை நடத்தியதில் பெற்ற தொகையை எண்ண முடியாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தது மட்டுமின்றி, கூடுதல் எண்ணும் இயந்திரத்தையும் கொண்டு வர வேண்டியதாயிற்று.  ஊழலை துடைக்க துடைப்பத்துடன் வெளியே வந்தவர்கள் நோட்டுகளை மாற்றுகிறார்கள்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



உண்மை என்ன?


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது கடந்த 2022-இல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதை அறிய முடிந்தது. 


#NIA in #PFI office in #Kerala 😮😮😮 pic.twitter.com/M2DWAS5Lhb

— BheemBoy💕🇮🇳 Eat millets Stay Healthy🙏 (@PITCHBOSS) October 1, 2022


எனவே, இது குறித்து மேலும் ஆய்வு செய்ததில், பரவி வரும் இதே வீடியோவை, “CNN-News18” தனது யூடியூப் பக்கத்தில், “கொல்கத்தாவில் அமலாக்கத்துறை மெகா ரெய்டு நடத்தி ₹18 கோடி பணத்தை மீட்டது | வைரல் வீடியோ | ஆங்கில செய்திகள்” என்றி குறிப்பிட்டு கடந்த 2022 செப்டம்பர் 11 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதன் மூலம் இது குஜராத்தில் நடந்த சம்பவம் அல்ல, கொல்கத்தாவில் கடந்த 2022-ல் அமலாக்கத்துறை சோதனை நடத்திய போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது. 



மேலும் இது குறித்து அமலாக்கத்துறையினர், தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “மொபைல் கேமிங் பயன்பாடு தொடர்பான விசாரணை தொடர்பாக, கொல்கத்தாவில் உள்ள 06 இடங்களில் PMLA, 2002 (10.09.2022 அன்று) இன் கீழ் அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ரூ.17.32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டு கடந்த 2022 செப்டம்பர் 12 அன்று செய்தி வெளியிட்டிருந்தது.



மேலும் இதே போன்று, “Times of India” பக்கத்திலும் கடந்த 2022 செப்டம்பர் 12 அன்று இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “கொல்கத்தாவைச் சேர்ந்த “E-Nuggets” மொபைல் கேமிங் செயலி நிறுவனத்தை சேர்ந்தவர்களை அமலாக்க இயக்குநரகம் சோதனை செய்தது. சோதனை செய்ததில் சுமார் ரூ.17 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.


முடிவு:


நம் தேடலில், குஜராத் சூரத் நகர ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சேகர் அகர்வாலின் வீட்டில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தியதாகக் கூறி பரவும் வீடியோ, கொல்கத்தாவில் கடந்த 2022 இல் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.