
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter Link
விரிவான விளக்கம்
இந்நிலையில் கடந்த அக்டோபர் 27 அன்று கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு பேரணியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான காலித் மஷால் கலந்துகொண்டார். இந்த கூட்டம் நடைபெற்ற ஓரிரு நாட்களிலேயே கேரளாவில் உள்ள யூதர்களின் மீதான தாக்குதலாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்று கூறி சரவணபிரசாத் உட்பட வலதுசாரிகள் பலரும் இதை இஸ்ரேல் பாலஸ்தீனப் போருடன் தொடர்புபடுத்தி பரப்பி வருகின்றனர்.
கேரளா மலப்புரத்தில் ஹமாஸ் தீவிரவாத இயக்கத் தலைவனை காணொளியில் பேச வைக்கிறார்கள்.
அடுத்த நாள் கிறிஸ்தவ ஜெகோவா ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குண்டு வெடிப்பு ?💥
தமிழகமே விழித்துக் கொள் ❗️ pic.twitter.com/uHmsZWsSam
— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) October 29, 2023
BIG BREAKING: Four blasts in Kerala
Four coordinated blasts rock Kerala where Jews live in Kalamassery
This comes day after Former #Hamas chief Khaled Meshaal surfaced in Kerala to make virtual address ata pro-Palestine rally in Malappuram
Do you all still doubt The Kerala… pic.twitter.com/fk7sy5Kv33
— Rohan Dua (@rohanduaT02) October 29, 2023
Archive Link
மேலும் தமிழ் பொக்கிஷம் யூடியூப் சேனலை நடத்திவரும் விக்னேஸ்வரன் போன்ற பலரும் இந்த சம்பவத்தின் விசாரணை முடிவடைவதற்கு முன்பே இதை கேரளாவில் காலித் மஷால் பேசிய சம்பவத்துடன் தொடர்புபடுத்தி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிராக உள்ளனரோ என்று தொடர்புபடுத்தி வீடியோவையும் வெளியிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், கேரள சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியான எம்.ஆர். அஜித் குமார் இந்த சம்பவம் குறித்து பேசிய வீடியோ கிடைத்தது. அதில் பேசிய அவர், "திருச்சூர் கிராமத்தில் உள்ள கோடாக்ரா காவல் நிலையத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். அவரது பெயர் டொமினிக் மார்ட்டின், அவர் அந்த சபையின் ஒரே குழுவைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார். நாங்கள் அதைச் சரிபார்த்து வருகிறோம். இந்த வழக்கில் இது தொடர்பான அனைத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் மண்டபத்தின் மையப் பகுதியில் நிகழ்ந்துள்ளது" என்று பேசியுள்ளார்.
#WATCH | On the blast at Zamra International Convention & Exhibition Centre, Kalamassery, Kerala ADGP (law and order) MR Ajith Kumar, says "One person has surrendered in Kodakra Police Station, in Thrissur Rural, claiming that he has done it. His name is Dominic Martin and he… pic.twitter.com/q59H7TaQC7
— ANI (@ANI) October 29, 2023
இது தொடர்பாக டொமினிக் மார்ட்டின் என்பவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள வாக்குமூல வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், "என் பெயர் மார்டின், இந்த சம்பவத்திற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன். அங்கு குண்டு வெடிப்பை நிகழ்த்தியவன் நான் தான்." என்று கூறி பேசியுள்ளார்.
டொமினிக் மார்ட்டின் பேசியது தொடர்பாக தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தியில்" நான் 16 வருடங்கள் அந்த சபையில் ‘தீவிரம் இல்லாத’ ஒரு உறுப்பினராக இருந்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் போதனைகள் 'தேச விரோதமாக' இருப்பதைக் கண்டேன். வகுப்புத் தோழர்கள் வழங்கும் இனிப்புகள் மற்றும் உணவுப் பொருட்களை மறுக்குமாறு அவர்கள் குழந்தைகளை அறிவுறுத்தினர். இந்த வகையான பிரசங்கத்தை நிறுத்துமாறு நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தேன், மதத்தின் தலைமை அதற்கு செவிசாய்க்க மறுத்தது. அவர்கள் தங்கள் சபை உறுப்பினர்களை தேசிய கீதத்தைப் பாடுவதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் குழந்தைகள் உள்பட மக்களின் மனதில் விஷத்தை செலுத்துவதற்கு சமமானதாக இருந்தது.
வயதுவந்த உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டாம் என்றும் சிவில் அல்லது இராணுவ சேவையில் சேர வேண்டாம் என்றும் அவர்களால் கூறப்பட்டது. அவர்கள் மற்றவர்களுக்கு நோய் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் மற்றும் அவர்கள் தவிர மற்றவர்கள் இறந்துவிடுவார்கள் என்றும் கற்பிக்கிறார்கள். இத்தகைய போதனைகள் சமூகத்திற்கு ஆபத்தாக இருப்பதைக் கண்டறிந்ததால் தான் நான் எதிர்வினை செய்ய வேண்டியிருந்தது." என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்." என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், குண்டுவெடிப்பு நடந்தது யூதர்கள் மீதான தாக்குதல் அல்ல, ஜெஹோவா கிறிஸ்தவ சபை மீது நடந்துள்ளது. அதே ஜெஹோவா கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்று கூறி அவராகவே வாக்குமூலம் அளித்து சரணடைந்துள்ளார் என்பதையும், இது தொடர்பாக காவல்துறையினாரால் மேலும் விசாரணை நடந்து வருவதையும் அறிய முடிகிறது.
முடிவு :
நம் தேடலில், கேரள குண்டுவெடிப்பு சம்பவம் யூதர்களுக்கு எதிராக நடந்துள்ளது என்றும், இதற்கு காரணம் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான காலித் மஷால் கலந்துகொண்டது தான் என்றும் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
ஆதாரங்கள்
https://www.indiatoday.in/india/story/man-claims-responsibility-for-kerala-serial-blasts-kalamassery-2455257-2023-10-29
Man named Dominic Martin claims responsibility for Kerala blasts| Jehovah’s Witnesses