YouTurn

குரோர்பதி நிகழ்ச்சியில் பாஜகவின் பொய் பிரச்சாரத்தால் ரூ7.5 கோடியை இழந்ததாகப் பரவும் எடிட் செய்த வீடியோ !

குரோர்பதி நிகழ்ச்சியில் பாஜகவின் பொய் பிரச்சாரத்தால் ரூ7.5 கோடியை இழந்ததாகப் பரவும் எடிட் செய்த வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாஜகவின் போலிப் பிரச்சாரத்தால் இந்த நபர் ₹ 7.5 கோடி இழந்துள்ளார். மகாகாள் வழித்தடத்தை காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முதல்வராக இருந்தபோது கட்டினார். பாஜகவின் பொய்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள் . இவர் ஏழரை கோடியை தவறவிட்டது போல் நீங்கள் நிறைய வாழ்க்கையில் இழப்பீர்கள்..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

டிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியான குரோர்பதியில், பாஜகவின் போலிப் பிரச்சாரத்தால் போட்டியாளர் ஒருவர் ₹ 7.5 கோடியை இழந்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும் அப்பதிவுகளில் "மகாகாள் வழித்தடத்தை காங்கிரஸ் தலைவர் கமல்நாத் முதல்வராக இருந்தபோது கட்டினார். பாஜகவின் பொய்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். இவர் ஏழரைக் கோடியை தவறவிட்டது போல, நீங்கள் நிறைய வாழ்க்கையில் இழப்பீர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிந்தது.



Archive Link



Archive Link

உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ குரோர்பதி நிகழ்ச்சியின் 14-வது சீசனில் ஷாஷ்வத் கோயல் என்ற நபர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.

மேலும் 1:21:30 மணி நேரம் கொண்ட இந்த வீடியோவின் முழு தொகுப்பினை ஆய்வு செய்ததில், பரவி வரும் வீடியோவில் உள்ளவாறு மகாகாள் லோக் குறித்த கேள்வி, இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படவில்லை.



ரூ 7.5 கோடிக்கான கேள்வியானது, வீடியோவில் சரியாக 1:11:42 மணி நேரத்தில் ஒளிபரப்பாகிறது. அதில் "இந்தியாவுக்கு முதல் சேவையாக இருந்த எந்த பிரிட்டிஷ் ராணுவப் பிரிவுக்கு 'ப்ரிமஸ் இன் இண்டிஸ்' என்ற முழக்கம் வழங்கப்பட்டது?" என்ற கேள்வி கேட்கப்பட்டிருப்பதையும், அதற்கு அந்த நபர் தவறாக பதிலளித்துள்ளதையும் காண முடிந்தது.  ஆனால் அதில் "உஜ்ஜயினியில் அமைந்துள்ள மகாகாள் லோக்கை எந்த அரசாங்கம் கட்டியது?” என்ற கேள்வி கேட்கப்படவே இல்லை.

இந்த வீடியோவை சிலர் தவறாக எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை நம் ஆய்வின் முடிவில் அறிய முடிகிறது.



மேலும் இந்த நிகழ்ச்சியில் ஷாஷ்வத் கோயல், ரூ 7.5 கோடியை இழந்தது குறித்து "கேபிசி 14: ஷாஷ்வத் கோயல் ரூ. 7.5 கோடி கேள்விக்கு பதிலளிக்கத் தவறி, ரூ.75 லட்சத்துடன் வீடு திரும்பினார்" என்ற தலைப்புடன் நியூஸ்18 கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இறுதியாக கேட்கப்பட்ட கேள்வி இடம்பெற்றுள்ளது. 



மேலும் படிக்க: மெஹந்தியில் UPI QR குறியீடு மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை எனப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ !

மேலும் படிக்க: கடலுக்கு அடியில் காட்சி தரும் துவாரகை எனப் பரவும் அனிமேஷன் வீடியோ !

முடிவு:

நம் தேடலில், அமிதாப்பச்சனின் குரோர்பதி நிகழ்ச்சியில் பாஜகவின் போலிப் பிரச்சாரத்தால் போட்டியாளர் ஒருவர் தவறான பதிலைக் கூறி ரூ7.5 கோடியை இழந்ததாகக் கூறி பரவி வரும் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க