YouTurn

ஆணும் பெண்ணும் சேர்ந்து நின்றால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா அறிவித்ததாக பரவும் செய்தி! உண்மை என்ன?

ஆணும் பெண்ணும் சேர்ந்து நின்றால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா அறிவித்ததாக பரவும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ரமலான் மாதத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நின்றால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று ‘ஜாமியா மில்லியா இஸ்லாமியா’ அறிவித்ததாக பரவும் அறிக்கை போலியானது. உண்மையான அறிக்கையில் 75 சதவீதத்துக்கு கீழ் வருகைப்பதிவு இல்லாதவர்கள் தேர்வு எழுத முடியாது என்றே குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்.

பரவிய செய்தி

Jamia Millia Islamia issues notice outlining restrictions on student behavior on campus during Ramadan.

image.png

X Link / Archived Link

விரிவான விளக்கம்

டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக கூறி அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அதில் ரமலான் மாதத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நிற்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை ஆணும் பெண்ணும் சேர்ந்து நிற்பது கண்டறியப்பட்டால் அவ்விருவருக்கும் உடனடியாக நிக்கா செய்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உண்மை என்ன? 

பரவி வரும் அந்த அறிக்கையில் தேதி ‘20/02/2026’ என்று இருந்ததை பார்க்கமுடிந்தது. ஆனால் கீழே துணை பதிவாளர் கையொப்பம் ‘20/01/2026’ தேதியுடன் இருந்தது. 


இதையடுத்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் வைரலாகும் அறிக்கை குறித்து தேடினோம்.  அப்போது ஜனவரி 20, 2026 அன்று வைரலாகும் அறிக்கையிலிருந்த C&O- 9(2)/RO/2026 என்ற எண்ணுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் 75 சதவீதத்து கீழ் வருகைப்பதிவு இல்லாதவர்கள் தேர்வு எழுத முடியாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து பார்க்கும் போது, பரவி வரும் அறிக்கை எடிட் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது என்பது தெளிவானது.

image.png


இது குறித்து மேலும் தேடிய போது, பிப்ரவரி 24, 2026 அன்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் மற்றொரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தது. அதில் ரமலான் மாதத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நிற்பது கண்டறியப்பட்டால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது. இதுபோன்ற எந்த உத்தரவையும் பல்கலைக்கழக அதிகாரிகள் வெளியிடவில்லை.இதுக்குறித்து டெல்லி சைபர் போலீஸில் பல்கலைக்கழகம் புகார் அளித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

image.png


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, ரமலான் மாதத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நின்றால் நிக்கா செய்து வைக்கப்படும் என்று ‘ஜாமியா மில்லியா இஸ்லாமியா’ அறிவித்ததாக பரவும் அறிக்கை போலியானது. உண்மையான அறிக்கையில் 75 சதவீதத்துக்கு கீழ் வருகைப்பதிவு இல்லாதவர்கள் தேர்வு எழுத முடியாது என்றே குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க