யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தனது தந்தையின் நினைவாக ராஜீவ் காந்தியின் சமாதியிலிருந்து ஒரு பூவை மட்டும் ராகுல் காந்தி எடுத்துச் செல்வதை திரித்து, சமாதியில் வைக்கப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்றை திருடியதாக தவறாக பரப்பப்படுகிறது.
பரவிய செய்தி
காந்தி சமாதி மீது தூவப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்றை சுட்டு ஜோபில போட்டுக் கொள்ளும் அல்பயை. சமாதி மீதுள்ள காசையே சுடுபவன் நாளை இந்தியாவை ஆள நேர்ந்தால் மக்கள் கதி தமிழ்நாட்டை போல் தான்.

விரிவான விளக்கம்
ராகுல் காந்தி ஏதோ ஒன்றை எடுத்து தனது பேண்ட் பையில் வைக்கும் வீடியோ துணுக்கை பதிவிட்டு, ‘ராஜீவ் காந்தி சமாதி மீது வைக்கப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்றை திருடி ராகுல் காந்தி தனது பேண்ட் பையில் போட்டுக்கொள்கிறார்’ என்று சமூக வலைத்தளத்தில் பாஜகவினரால் பரப்பப்படுகிறது.
#காந்தி பட்ட பெயர் வைத்து உள்ள தறுதலை
காந்தி சமாதி மீது தூவப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்றை சுட்டு ஜோபில போட்டுக் கொள்ளும்
அல்பயை😂😂😂
சமாதி மீதுள்ள காசையே
சுடுபவன் நாளை இந்தியாவை ஆள நேர்ந்தால் மக்கள்கதிதமிழ்நாட்டை போல் தான். pic.twitter.com/PDvW7GGLaI
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Live Hindustan’ என்ற யூடியூப் தளத்தில் இந்த செய்தி வீடியோவைக் காணமுடிந்தது. இந்த செய்தி கடந்த மே 21ஆம் தேதி ராஜீவ் காந்தி இறந்த தினத்தன்று ராகுல் காந்தி நினைவஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்டது.

இந்த செய்தியில், ‘ராஜீவ் காந்தியின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு, பூ அலங்காரம் செய்யப்பட்டிருந்த அந்த சமாதியிலிருந்து தனது தந்தையின் நினைவாக ஒரு பூவை மட்டும் ராகுல் காந்தி எடுத்துச் சென்றார்’ என்று தெளிவாக குறிப்பிடப்படுகிறது.
இதனை திரித்து, ராஜீவ் காந்தி சமாதியில் வைக்கப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்றை ராகுல் காந்தி திருடியதாக தவறாக பரப்புகிறார்கள்.
முடிவு:
தனது தந்தையின் நினைவாக ராஜீவ் காந்தியின் சமாதியிலிருந்து ஒரு பூவை மட்டும் ராகுல் காந்தி எடுத்துச் செல்வதை திரித்து, சமாதியில் வைக்கப்பட்டிருந்த நாணயங்களில் ஒன்றை திருடியதாக பாஜகவினர் தவறாக பரப்புகிறார்கள்.