யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இது நேபாளப் பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழுவின் (OPMCM) கீழ் இயங்கும் ஒரு திட்டம், இந்தியாவில் செயப்படுத்தப்பட்ட திட்டம் அல்ல.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
அரசு அலுவலங்களில் நடக்கும் ஊழலை நேரடியாக புகாரளிக்க 9851145045 என்ற Hotline எண்ணை தொடங்கியுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த உண்மை தானா என்பதை அறிய, முக்கிய வார்த்தைகளை வைத்து தேடலை தொடங்கினோம். அப்போது அப்போது Republica ஊடகத்தில் ”PM Karki launches hotline to address public grievances related to govt service delivery” என்ற தலைப்பில் செப்டம்பர் 20, 2025 அன்று வெளியான ஒரு செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் நேபாள பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் முழு(OPMCM), பேரம் பேசுதல், லஞ்சம் கேட்பது, தேவையாற்ற துன்புறுத்தல் அல்லது அரசு அதிகாரிகளின் அவமரியாதை நடத்தை உள்ளிட்ட ஏதேனும் தவறான நடத்தை ஏற்பட்டால் 9851145045 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று கேட்டு கொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் நேபாள ஊடகமான Nepal telecom ஊடகத்தில், ”Sushila Karki’s government launches hotline to address grievances” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் நேபாள பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழு(OPMCM), அரசு சேவைகள் தொடர்பான பொதுமக்களின் குறைகளைக் கேட்டு தீர்ப்பதற்காக, பொதுமக்களுக்காக ஒரு Hotline எண்ணை அறிவித்துள்ளதாகவும், பிரதமர் சுஷிலா கார்க்கியின் அரசாங்கம் பொதுமக்களை சென்றடைவதற்காக செப்டம்பர் 20 அன்று 9851145045 என்ற Hotline எண்ணை தொடங்கியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை உறுதிசெய்ய, நேபாளப் பிரதமர் அலுவலகம் மற்றும் அமைச்சர்கள் குழுவின்(OPMCM)வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை ஆராய்ந்தோம். அப்போது Hello Government என்ற பிரிவில் Viber மற்றும் WhatsApp-க்கான அதே எண்(9851145045) இருந்தது பார்க்கமுடிந்தது.

முடிவு:
நம் தேடலில், பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாக ஊழலைப் புகாரளிக்க நேபாளம் போல் இந்தியாவில் ஒரு Hotline எண் இல்லை. எனவே பிரதமர் நரேந்திர மோடி ஒரு தொலைப்பேசி எண்ணை (9851145045) அறிமுகப்படுத்தியுள்ளார் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை.
