YouTurn

இந்து மதத்தை சேர்ந்த நபருக்கு இஸ்லாமியர்கள் காலனிகள் மாலை அணிவித்ததாக தவறாக பரப்பி வருகின்றனர்!

இந்து மதத்தை சேர்ந்த நபருக்கு இஸ்லாமியர்கள் காலனிகள் மாலை அணிவித்ததாக தவறாக பரப்பி வருகின்றனர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோவில் இருப்பவரின் பெயர் டாக்டர் அகமது அலி. இவர் நபிகள் நாயகத்தை அவமதித்ததால், வங்காளதேசத்தின் ராஜ்பரி மாவட்டம் பலியாகண்டியில் உள்ள மக்கள் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து சந்தையில் சுற்றித் திரிய வைத்தனர்.

பரவிய செய்தி

பங்களாதேசில் 43 வருடம் ஆசிரியராக பணிபுரிந்த சிறுபான்மை ஹிந்து ஆசிரியருக்கு அந்த நாட்டு பெரும்பான்மை பாயானுங்க சார்பில் நடத்தபட்டபிரிவு உபசார விழா இந்தியாவில் எந்த சிறுபான்மை இஸ்லாமிய ஆசிரியர்க்கும் இந்த கொடுமை நடந்தது இல்லை வந்த பின் வருந்துவதை விட வரும் முன் காப்பாதே சிறந்தது.

X Link | Archived Link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் 43 வருடமாக ஆசிரியராக பணிபுரிந்த ஹிந்து மதத்தை சேர்ந்த நபருக்கு, இஸ்லாமியர்கள் செருப்பு மாலை அணிவித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

பரவி வரும் வீடியோ குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், ஜூன் 19, 2025 அன்று பரவி வரும் வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுருப்பதை பார்க்கமுடிந்தது. அந்தப் பதிவில், வைரல் காணொளியில் துன்புறுத்தப்பட்ட நபரின் பெயர் டாக்டர் அகமது அலி என்றும், மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறி எத்தனை மத வெறியர்கள் அவரை சித்திரவதை செய்கிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். 


இதையடுத்து இந்த செய்தி குறித்து மேலும் தேடி பார்த்தோம். அப்போது ஜூன்15, 2025 அன்று வங்கதேச ஊடகமான காலர் காந்தோவில் புகைப்படங்களுடன் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் டாக்டர் அகமது அலி என்ற நபர் நபிகள் நாயகத்தை அவமதித்ததால், வங்காளதேசத்தின் ராஜ்பரி மாவட்டம் பலியாகண்டியில் உள்ள மக்கள் அவருக்கு செருப்பு மாலை அணிவித்து சந்தையில் சுற்றித் திரிய வைத்தனர். இதையடுத்து காவல்துறையினரும், ராணுவத்தினரும் சம்பவ இடத்திற்குச் சென்று, நிலைமையை அமைதிப்படுத்தி அந்த நபரை மீட்டனர். 

image.png

இதே போல் dhakatimes24, bangla.bdnews24 போன்ற வங்கதேச ஊடகப் பக்கத்திலும் இது குறித்து செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

நம் தேடலில் காலணி மாலை அணிந்திருப்பவர் ஒரு இந்து அல்ல, மாறாக ஒரு இஸ்லாமியர் என்பது தெளிவாகியுள்ளது. மத வெறுப்பு நோக்கத்தோடு தவறாக பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க