YouTurn

தேச துரோகிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாக பரவும் காணொளி! உண்மை என்ன?

தேச துரோகிகள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாக பரவும் காணொளி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது ஊரடங்கு விதிகளை மீறியதற்காக போலீஸ் துரத்தியதை, தற்போது நடந்ததாக தவறாக பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

தேச துரோககளை துரத்தி துரத்தி பொளந்து எடுக்கும் அசாம் போலீஸ்…

image.png

Archived Link

விரிவான விளக்கம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே ஆயுத மோதல் வெடித்தது. நான்கு நாட்கள் மோதலுக்குப் பின்னர் மே 10 அன்று தாக்குதல் நிறுத்தம் (ceasefire) அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையும் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு செய்திகள் பரவி வருகிறது. 


இந்நிலையில் அசாமில் தேசத் துரோகிகளைத் துரத்தித் துரத்தி அடிக்கும் காவல்துறை என்று காணொளி ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அதில் காவல்துறையினர் லத்தி மூலம் அங்கிருப்பவர்களை அடிப்பது போன்றும், அங்கிருக்கும் மக்கள் பயந்து ஓடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 


உண்மை என்ன?

பரவி வரும் காணொளியின் படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது arab chat page என்ற முகநூல் பக்கத்தில் டிசம்பர் 13, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. இதையடுத்து இந்த காணொளி 2022 முதலே பரவி வருவதை உறுதிசெய்ய முடிந்தது. 

image.png

வேறு ஏதும் தகவல் கிடைக்குமா என்று தேடிப் பார்த்தோம். அப்போது E News Bangla என்ற செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், பரவி வரும் காணொளி காட்சிகள் இருந்ததைக் காணமுடிந்தது. "Police chase during lockdown! A man's lungi came off while running", என்ற தலைப்பில் செப்டம்பர் 8, 2020 அன்று இது குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 

பரவி வரும் காணொளி 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் லத்தி மூலம் விரட்டியுள்ளது தெரியவந்தது. மேலும் இது தொடர்பாகத் தேடிய போது, இது குறித்தான எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 


முடிவு : 

நம் தேடலில், 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது நடைபெற்ற சம்பவத்தை, தற்போது நடந்ததாகத் தவறாகப் பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க