யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
1942ஆம் ஆண்டில் 18 வயதாக இருந்தபோதே ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு (Quit India Movement)’ போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார். சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கை அங்கீகரித்து அவருக்கு ‘அஞ்சல் தலை (Postal Stamp)’ வெளியிட்டுள்ளது இந்திய அஞ்சல் துறை.
பரவிய செய்தி
மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களின் பார்வைக்கு.
இம்மானுயேல் என்ற ஒரு சமூகத் தலைவருக்கு மணிமண்டபம் கட்டுவதில் எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை.
ஆனால் எந்த காரணத்தினால் இந்த சமூகத் தலைவரை சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி என்று கூறுகிறீர்கள்.
இவர் எந்த ஆண்டு எந்த இடத்தில் யாரை எதிர்த்து சுதந்திரத்திற்காக போராடினார் இவரை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நீங்கள் சுதந்திர போராட்ட வீரர் என்று குறிப்பிடுகிறீர்கள்.

விரிவான விளக்கம்
தியாகி. இம்மானுவேல் சேகரன் எவ்விதமான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்றும், இவருக்கு எப்படி மணிமண்டபம் கட்ட முடியும் என்றும், சுதந்திரதிற்காக போராடியுள்ளார் என்றால் அதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும் எனவும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
தியாகி. இம்மானுவேல் சேகரன் எவ்விதமான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்று பரவும் செய்தி குறித்து தேடினோம். அப்போது Mintage World என்ற இணையப்பக்கத்தில் ”Remembering brave leader of India: Immanuel Sekaran” என்ற தலைப்பில் அக்டோபர் 09, 2020 அன்று பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதில் இம்மானுவேல் சேகரன் 1942ஆம் ஆண்டில் 18 வயதாக இருந்தபோதே ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு (Quit India Movement)’ போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலும் தேடிய போது, The South First ஊடகத்தில் செப்டம்பர் 12, 2024 அன்று தியாகி. இம்மானுவேல் சேகரன் வாழ்க்கை வரலாறு வெளியிடப்பட்டிருந்தது. அதிலும் 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கை அங்கீகரித்து, இந்திய அஞ்சல் துறை அவருக்கு ‘அஞ்சல் தலை (Postal Stamp)’ வெளியிட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, தியாகி. இம்மானுவேல் சேகரன் எவ்விதமான சுதந்திர போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை என்று சாதி ஆதிக்கவாதிகளால் சமூக வலைதளங்களில் தவறாக பரப்பப்படுகிறது. 1942ஆம் ஆண்டில் 18 வயதாக இருந்தபோதே ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ‘வெள்ளையனே வெளியேறு (Quit India Movement)’ போராட்டத்தில் கலந்துகொண்டு மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார்.