YouTurn

நயினார் கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

நயினார் கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள் என்று பரவும் போலி நியூஸ் கார்ட்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

Youturn தரப்பில், News Tamil 24×7 ஊடகத்தை தொடர்புக் கொண்டு கேட்டப் போது, இப்படியான நியூஸ் கார்ட்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதிச் செய்தனர். மேலும் ஸ்ரீ சாய்பாபா இண்டேன் கேஸ் ஏஜென்சீஸ் என்ற பெயர் பலகையை, நயினார் இண்டேன் கேஸ் ஏஜென்சி என்று எடிட் செய்து பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

நயினார் கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள்

image.png

Archived Link

விரிவான விளக்கம்

அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் காரணமாக உலகின் 20 சதவீத எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்கள், போக்குவரத்து வாகனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்நாட்டில் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கேஸ் கிடைக்காததால் திருநெல்வேலியில் உள்ள அவரது கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள் என்று News Tamil 24×7 ஊடகத்தின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது. 



உண்மை என்ன? 

முதலில் பரவி வரும் இந்த நியூஸ் கார்ட் குறித்து News Tamil 24×7 ஊடகத்தின் சமூக வலைதளப்பக்கங்களில் தேடினோம். ஆனால் இப்படியான எந்த நியூஸ் கார்டும் அங்கு வெளியாகவில்லை.  


இதையடுத்து அந்த நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது நயினார் இண்டேன் கேஸ் ஏஜென்சி  என்ற பெயர் பலகை போல், Just Dial பக்கத்தில் ஒரு புகைப்படம் கிடைத்தது. அதில்  ஸ்ரீ சாய்பாபா இண்டேன் கேஸ் ஏஜென்சீஸ் என்ற பெயர் இருந்தது. இதிலிருந்தது இந்த பெயர் பலகையை தான், நயினார் இண்டேன் கேஸ் ஏஜென்சி என்று எடிட் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது. 


இதை உறுதிச் செய்ய Youturn தரப்பில் இருந்து News Tamil 24×7 ஊடகத்திற்கு தொடர்புக் கொண்டு இந்த நியூஸ் கார்ட் குறித்து கேட்டோம். அப்போது  இப்படியான நியூஸ் கார்ட்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதிச் செய்தனர்.  


முடிவு: 

எனவே, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேஸ் ஏஜன்சியை முற்றுகையிட்ட மக்கள் என்று பரவும் நியூஸ் கார்ட் போலியானது. இப்படியான நியூஸ் கார்ட்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை News Tamil 24×7 ஊடகம் உறுதிச் செய்தனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க