யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
ஆவடியில் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் மின்சார கேபிள் பெட்டியில் 14 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டது போன்று பரவும் நியூஸ்கார்டு உண்மையானதல்ல. எடிட் செய்யப்பட்டது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல பகுதிகளில் மின்சார வெட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதையடுத்து ஃபியூஸ் கேரியர்கள் திருடப்படுவதே மின்வெட்டுக்கு காரணம் என்று மின்வாரிய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு பலம் சேர்க்கும் வகையில் ஆவடியில் மின்சார ஃபியூஸ் கேரியர்களை திருடியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இவர்கள் தி.மு.க-வை சார்ந்தவர்கள் என்று த.வெ.க-வினர் சன் நியூஸ் வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் நியூஸ் கார்டில் 09 ஜூன் 2026 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை வைத்து சன் நியூஸ் ஊடகத்தின் சமூகவலைதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது அதில் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக ஜூன் 09 அன்று நியூஸ் கார்ட் வெளியிட்டிருந்ததை பார்க்கமுடிந்தது. ஆனால் அதில் அவர்கள் இருவரும் கட்சிக் கொடி துண்டு எதையும் அணிந்திருக்கவில்லை.
#NewsUpdate | ஆவடியில் பியூஸ் கேரியர்களை திருடிய வழக்கில் இருவர் கைது!#SunNews | #Avadi | #ChennaiPolice pic.twitter.com/Sz1Jis40dV
இதை மேலும் உறுதி செய்ய பரவி வரும் நியூஸ் கார்ட் குறித்து சன் நியூஸ் ஊடகத்தை தொடர்புக் கொண்டு கேட்டப் போது, இது தொடர்பான நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்பதை உறுதி செய்தனர்.

முடிவு:
எனவே, ஆவடியில் ஃபியூஸ் கேரியர்களை திருடியதாக கைது செய்யப்பட்ட இருவர் தி.மு.க துண்டு அணிந்திருப்பது போல் பரவும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவானது.
