யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நம் தேடலில் முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் ஒன்றிய அரசு இலவசமாக ரூ.5000 வழங்குவதாக பரவும் செய்தி போலியானவை. ஒன்றிய அரசு மட்டுமல்ல, எந்த ஒரு அரசும், தனியார் நிறுவனமும் இப்படி இணைய இணைப்புகளை கிளிக் செய்தால் பணம் வழங்கும் என்றெல்லாம் அறிவிக்காது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் மத்திய அரசு வழங்கும் ரூ.5000 உங்கள் கணக்கில் இலவசத் திட்டம். இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் கணக்கில் பணத்தைப் பெறுங்கள் என்று வீடியோ பதிவு ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதே போன்று, கொடியை கிளிக் செய்யவும் ரூ.5000 நேரடியாக கணக்கில். இன்றே உங்கள் வாய்ப்பு என்று குறிப்பிட்டு மற்றொரு பதிவு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன?
பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடிப் பார்த்தோம். இந்தியக் குடிமக்களுக்கு நேரடியாக ஒரு லிங்க்கை தொடுவதன் மூலமோ, இணையத்தில் பதிவு செய்வதன் மூலமோ ரூ.5000 வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து முத்ரா இணையதளப்பக்கத்தில் இது போன்ற அறிவிப்பு ஏதேனும் வெளியாகியுள்ளதா என்பதையும் தேடினோம். அப்போது அந்த பக்கத்தின் முகப்பில், முத்ரா லிமிடெட் நிறுவனம் தனிநபர்களுக்கு முத்ரா கடன்களை நேரடியாக வழங்குவதில்லை என்றும், அத்தகைய கடன்களை வங்கிகள்/ வங்கி சாரா நிதி நிறுவனங்கள்/ நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுருந்தது.

மேலும் இத்தகைய கடன்களைப் பெறுவதற்காக முத்ரா நிறுவனத்தால் எந்த முகவர்களோ அல்லது இடைத்தரகர்களோ நியமிக்கப்படவில்லை என்றும், முத்ரா/பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் முகவர்கள்/உதவியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் நபர்களிடமிருந்து கடன் பெறுபவர்கள் விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடினோம். அப்போது 2025ஆம் ஆண்டு சட்டக் காப்பீட்டுக் கட்டணமாக ₹36,500 செலுத்தினால், 𝐏𝐌 முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ₹3,00,000 கடன் வழங்குவதாக இதே போன்று ஒரு செய்தி பரவுள்ளதை பார்க்கமுடிந்தது. அதை போலியானது என்று ஒன்றிய அரசின் PIB உண்மைச் சரிபார்ப்பு குழு உறுதி செய்திருந்ததையும் காணமுடிந்தது.
An approval letter claims to grant a loan of ₹3,00,000 under the 𝐏𝐌 𝐌𝐮𝐝𝐫𝐚 𝐘𝐨𝐣𝐚𝐧𝐚 on payment of ₹36,500 as legal insurance charges #PIBFactCheck:
◾️This letter is #Fake
◾@FinMinIndia has not issued this letter
Read more: 🔗https://t.co/cQ5DW68Svl pic.twitter.com/H6epipQ9Rq
முடிவு:
எனவே, நம் தேடலில் முத்ரா திட்டத்தின் கீழ் அனைத்து இந்தியக் குடி மக்களுக்கும் ஒன்றிய அரசு இலவசமாக ரூ.5000 வழங்குவதாக பரவும் செய்தி போலியானவை. ஒன்றிய அரசு மட்டுமல்ல, எந்த ஒரு அரசும், தனியார் நிறுவனமும் இப்படி இணைய இணைப்புகளை கிளிக் செய்தால் பணம் வழங்கும் என்றெல்லாம் அறிவிக்காது.
