YouTurn

நாடாளுமன்றத்தில் ராகுலுக்கும் மோடிக்கும் வாக்குவாதம் என்று பரப்பப்படும் புகைப்படம்? உண்மை என்ன?

நாடாளுமன்றத்தில் ராகுலுக்கும் மோடிக்கும் வாக்குவாதம் என்று பரப்பப்படும் புகைப்படம்? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) போலியாக உருவாக்கப்பட்டது.

பரவிய செய்தி

இதைத்தான் சிங்கம் என்பார்கள், கண்களைப் பார்த்துப் பேசுபவர் #ராகுல்காந்தி 


Facebook Link

விரிவான விளக்கம்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் நரேந்திர மோடியும் நேருக்கு நேர் நின்று காரசாரமாக வாக்குவாதம் செய்வதாக, குறிப்பாக ராகுல் காந்தி மோடியை விரல் நீட்டி பேசுவது போன்ற ஒரு புகைப்படம் காங்கிரஸ் ஆதரவாளரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த புகைப்படத்தை ‘Reverse Image Search’ முறையில் இணையத்தில் தேடினோம். செய்தித்தளங்களிலோ, சமூக வலைத்தள பக்கங்களிலோ எதிலும் இந்த புகைப்படத்தைக் காணமுடியவில்லை.



அந்த புகைப்படத்தில் கேமராமேன்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளுக்கு இடையில் நின்று கொண்டிருப்பதை பார்க்கிறோம். இது போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கை வரை கேமராமேன்கள் அனுமதிக்கப்படவதில்லை.


இதனால், இந்த புகைப்படத்தை ‘Hive Moderation’ என்ற தளத்தில் சோதனை செய்தோம். அதிலிருந்து, இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) உருவாக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.


முடிவு:


செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) போலியாக உருவாக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு ராகும் காந்தியும் நரேந்திர மோடியும் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தவறாக பரப்பி வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க