யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவே நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
பரவிய செய்தி
பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம்: நகை வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

விரிவான விளக்கம்
பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்ய மாட்டோம் என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக கூறி தினகரன் ஊடகம், எந்த இடம் என்று குறிப்பிடாமல் நியூஸ் கார்ட் ஒன்று வெளியிட்டுள்ளது. தற்போது இது தமிழ்நாட்டில் வெளியிட்ட அறிவிப்பு என்று பலரும் comment செய்து வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவி வரும் செய்தி குறித்து keywords மூலம் கூகுளில் தேடினோம். அப்போது சமயம் தமிழ் ஊடகத்தில், ”நகைக் கடையில் புது ரூல்ஸ்.. புர்கா அணிந்து வரக் கூடாது.. சர்ச்சையை கிளப்பிய புது ரூல்ஸ்!” என்ற தலைப்பில் ஜனவரி 11, 2026 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் வாரணாசியில் உள்ள உத்தரபிரதேச நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் (UPJA) உள்ளூர் பிரிவு, பாதுகாப்பு காரணங்களுக்காக புர்கா , மாஸ்க், ஸ்கிரீன் மற்றும் ஹெல்மெட் அணிந்த வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்வதை தடை செய்துள்ளது. சமீபத்தில் நடந்த திருட்டு மற்றும் மோசடி சம்பவங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல் The Hindu ஊடகத்திலும், திருட்டு சம்பவங்களை தடுக்க உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாப், முகமூடி, தலைக்கவசம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு :
எனவே, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவே நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. தினகரன் ஊடகம் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள நியூஸ்கார்டில், இடம் குறித்து குறிக்கப்படாததால், தவறாகத் திரித்துப் பரப்பப்படுகிறது.