YouTurn

வட இந்தியர்கள் சாப்பாட்டில் குழம்புக்குப் பதிலாகச் சாணி ஊற்றிச் சாப்பிடுவதாகப் பரவும் பொய்!

வட இந்தியர்கள் சாப்பாட்டில் குழம்புக்குப் பதிலாகச் சாணி ஊற்றிச் சாப்பிடுவதாகப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

சோத்துல குழம்புக்கு பதில் "சாணி" தமிழ்நாட்டு சங்கிகள் ட்ரைபண்ணி வீடியோ போடுங்க ப்ரண்ட்ஸ் 



X link

விரிவான விளக்கம்

பலநூறு பேர் அமர்ந்து உணவு அருந்தும் 15 வினாடி வீடியோ ஒன்றை பதிவிட்டு, ‘சாப்பாட்டில் குழம்புக்குப் பதிலாகச் சாணி ஊற்றிச் சாப்பிடுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள சங்கிகள் இதனை முயற்சி செய்து வீடியோ பதிவிடுங்கள்’ எனப் பரப்பப்படுகிறது. இந்த சம்பவம் வட இந்தியாவில் நிகழ்ந்தது போலப் குறிப்பிடப்படுகிறது. 





Facebook link 

உண்மை என்ன? 

பரவக் கூடிய தகவலில் இருப்பது போல் யாரும் சாப்பாட்டில் சாணியை ஊற்றிச் சாப்பிடப் போவது கிடையாது. சிலர் சமூக வலைத்தளங்களில் பிரபலமடைவதற்காக அப்படிச் செய்யலாமே தவிர நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்படிச் செய்ய வாய்ப்பில்லை. 

எனவே பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். இந்த வீடியோவை 2023, ஏப்ரல் மாதம் shorts 4 nation என்னும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பங்களாதேஷில் உள்ள கிராமத்திற்கு இலவச உணவு வழங்கப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



இதே வீடியோ ‘Reddit’ தளத்திலும் 10 மாதங்களுக்கு முன்னர் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் பங்களாதேஷ் என்றுதான் உள்ளது. ஆனால், எங்கு எப்போது எடுக்கப்பட்டது என எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை. 



மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டது கிடையாது என அறிய முடிகிறது. மேலும் அந்த குழம்பில் கறி போன்று இருப்பதையும் காண முடிகிறது. இந்த குழம்பு வீடியோவைத்தான் மாட்டு சாணி எனத் தவறாகப் பரப்புகின்றனர்.  

மேலும் படிக்க : வடஇந்தியாவில் வெயிலுக்கு மாட்டுச்சாணம் ஜூஸ் குடிப்பதாகப் பரவும் வீடியோ.. உண்மை என்ன ?

இதே போன்று வட இந்தியர்கள் வெயிலுக்கு மாட்டுச்சாணி ஜூஸ் குடிப்பதாகப் பரவிய வீடியோ பற்றிய உண்மையும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், வட இந்தியர்கள் சாப்பாட்டில் குழம்புக்குப் பதிலாகச் சாணியை ஊற்றிச் சாப்பிடுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது குழம்புதான். மேலும் இந்த வீடியோ பங்களாதேஷில் எடுக்கப்பட்டது எனப் பல மாதங்களுக்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க