யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 35 வயது இளைஞர் ஒருவர் தம்பதியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையது. இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று தவறாகப் பரப்பி வருகிறனர்.
பரவிய செய்தி
என்னதான்டா நடக்குது தமிழ்நாட்டுல திமுகவுக்கு ஓட்டு போட்டா நாடு சுடுகாடு

விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் பொதுவெளியில் வைத்து ஒரு தம்பதியினர், நபர் ஒருவரை சரிமாரியாக வெட்டும் காட்சி என்று வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மை என்ன?
முதலில் பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Pune First என்ற ஊடகப்பக்கத்தில் மார்ச் 06, 2026 அன்று பரவி வரும் வீடியோ பதிவாகியிருந்தது. அதில் புனே இளைஞரை நாக்பூருக்கு இழுத்துச் சென்று, பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொன்ற தம்பதியினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Couple Lures Pune Man To Nagpur, Stabs Him To Death In Broad Daylight https://t.co/TkwIkMv4sF
இதை வைத்துக் கொண்டு keywords மூலம் இந்த செய்தி குறித்து தேடினோம். அப்போது The Free Press Journal ஊடகப்பக்கத்தில் “Couple Lures Pune Man To Nagpur, Stabs Him To Death In Broad Daylight; Shocking Video Goes Viral On Social Media” என்று குறிப்பிட்டு மார்ச் 06, 2026 அன்று இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது.

அதில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 35 வயது இளைஞர் ஒருவர் தம்பதியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவைச் சேர்ந்த சாகர் வான்கடே (35) என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டவர். இந்தச் சம்பவத்தில் ராஜேஷ் கஜ்பியே (37) மற்றும் அவரது 34 வயது மனைவி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில், பரவி வரும் வீடியோ மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், 35 வயது இளைஞர் ஒருவர் தம்பதியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையது. இதை தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் என்று தவறாகப் பரப்பி வருகிறனர்.