
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
எடப்பாடியார் மட்டும் இல்லையென்றால் சிஏஏ என்கிற கொடுஞ்சட்டம் அமலுக்கு வந்திருக்கும் - நெல்லை முபாரக்
Twitter Link | Archive Link

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
மதுரையில் கடந்த ஜனவரி 07 அன்று SDPI கட்சி சார்பில், 'வெல்லட்டும் மதச்சார்பின்மை' என்ற பெயரில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், "எடப்பாடியார் மட்டும் இல்லையென்றால் சிஏஏ என்கிற கொடுஞ்சட்டம் அமலுக்கு வந்திருக்கும்" என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கூறியதாகக் கூறி கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து அறிய, கடந்த ஜனவரி 07 அன்று நடைபெற்ற மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேசிய வீடியோவை ஆய்வு செய்து பார்த்தோம். மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசிய அவர், "பாஜகவை விட்டு அதிமுக வெளிவந்தது, எஸ்டிபிஐக்கு மட்டும் அல்ல, நாட்டில் ஜனநாயகத்தை விருப்புகிற அனைவருமே விரும்பிய நிகழ்வு." என்று பேசியிருந்ததைக் காண முடிந்தது. ஆனால் மாநாட்டில் எந்த இடத்திலும் CAA சட்டம் குறித்து அவர் பேசவில்லை.
மேலும் SDPI கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்பக்கத்தில் இது குறித்து தேடியதில், கடந்த ஜனவரி 07 அன்று "நெல்லையார் - எடப்பாடியார், நெல்லையார் கை அசைத்தால் களம் மாறும்" என்ற தலைப்பில் கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
எனவே கடந்த ஜனவரி 07 அன்று வெளியிடப்பட்ட இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிந்தது.

மேலும் சிஏஏ என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் பலரும் கடுமையாக எதிர்த்ததால், மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக வாக்களித்ததால் தான் அந்தச் சட்டம் ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும் என நெல்லை முபாரக் கூறியதாகப் பரவும் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.
இந்நிலையில், "எடப்பாடியார் மட்டும் இல்லையென்றால் சிஏஏ என்கிற கொடுஞ்சட்டம் அமலுக்கு வந்திருக்கும்" என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கூறியதாகக் கூறி கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

எடப்பாடி எனும் பாஞ்சில்றை https://t.co/oMpbk84LdD pic.twitter.com/g3aZsmmcP9
— DECODING BJP (@teamasterdiary) January 8, 2024
உண்மை என்ன ?
பரவி வரும் செய்திகள் குறித்து அறிய, கடந்த ஜனவரி 07 அன்று நடைபெற்ற மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பேசிய வீடியோவை ஆய்வு செய்து பார்த்தோம். மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசிய அவர், "பாஜகவை விட்டு அதிமுக வெளிவந்தது, எஸ்டிபிஐக்கு மட்டும் அல்ல, நாட்டில் ஜனநாயகத்தை விருப்புகிற அனைவருமே விரும்பிய நிகழ்வு." என்று பேசியிருந்ததைக் காண முடிந்தது. ஆனால் மாநாட்டில் எந்த இடத்திலும் CAA சட்டம் குறித்து அவர் பேசவில்லை.
மேலும் SDPI கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்பக்கத்தில் இது குறித்து தேடியதில், கடந்த ஜனவரி 07 அன்று "நெல்லையார் - எடப்பாடியார், நெல்லையார் கை அசைத்தால் களம் மாறும்" என்ற தலைப்பில் கார்டு ஒன்றை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
எனவே கடந்த ஜனவரி 07 அன்று வெளியிடப்பட்ட இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிந்தது.

மேலும் சிஏஏ என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் பலரும் கடுமையாக எதிர்த்ததால், மாநிலங்களவையில் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க மற்றும் பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவாக வாக்களித்ததால் தான் அந்தச் சட்டம் ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது.
முடிவு :
நம் தேடலில், எடப்பாடியார் இல்லையென்றால் சிஏஏ அமலுக்கு வந்திருக்கும் என நெல்லை முபாரக் கூறியதாகப் பரவும் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.