யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகமே ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அதனை சமாளிக்க உற்பத்தியை அதிகப்படுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இஸ்ரேல் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்து ஈரானை தாக்கியதால், ஈரான் இஸ்ரேல் மீதும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), கத்தார், குவைத், பஹ்ரைன் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால், வளைகுடா பகுதியில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்தை நிறுத்துவதாக ஈரான் அறிவித்தது. இதனால், எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவை கிடைப்பதில் பல்வேறு நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் ஹோட்டல்களில் வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது.
இது குறித்து பேசிய பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன், ’ஹோட்டல் முதலாளிகள் அனைத்து கேஸ் சிலிண்டர்களும் தீர்ந்து போயிவிட்டது, அதனால் உணவகங்களை மூடுகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. வருமான வரி துறையினர் 62 ஹோட்டல்களில் நடத்திய சோதனையில் இந்த ஹோட்டல்கள் தங்களது வருமானத்தை மறைத்து 408 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்த ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை மடைமாற்றவே இந்த ஹோட்டல்கள் சிலிண்டர் தீர்ந்துவிட்டதாக சொல்கிறார்கள். சிலிண்டர்கள் தட்டுபாடு இருப்பதாக சொல்வது உண்மையல்ல’ என்று பேசினார்.
உண்மை என்ன?
எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு குறித்த செய்திகளை தேடினோம். ’ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம்’ வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ‘போர் காரணமாக எரிபொருள் வழங்கலில் தடைகளும், சமையல் எரிவாயு (LPG) வழங்களில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு, எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கச் சொல்லி எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக’ தெரியவருகிறது.
In light of current geopolitical disruptions to fuel supply and constraints on supply of LPG, Ministry has issued orders to oil refineries for higher LPG production and using such extra production for domestic LPG use.
The ministry has prioritised domestic LPG supply to…
மேலும், பதுக்கலையும் கள்ளச் சந்தையில் சிலிண்டர்கள் விற்பதையும் தடுக்க 25 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே சிலிண்டர் புக் செய்யமுடியும் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

போர் காரணமாக ஏற்பட்ட சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சென்னை, பெங்களூர் போன்ற மாநகரங்களில் உள்ள பல உணவகங்கள் மூடப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சில உணவகங்கள் சிலிண்டர்கள் இருப்பு குறைவாக இருப்பதால், மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்று தெரிவித்துள்ளனர். மும்பையில் 20 சதவீத உணவகங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டது, இந்த நிலை சரியாகவில்லை என்றால் இன்னும் இரண்டு நாட்களில் 50 சதவீத உணவகங்கள் மூடப்படும் என்று சொல்லப்படுகிறது.

பல உணவகங்கள் சமைக்கப்படும் உணவு வகைகளை (Menu) குறைத்துக்கொண்டுள்ளனர். சில கடைகள் தங்களுக்கு மார்ச் 7ஆம் தேதியிலிருந்து சிலிண்டர்கள் கிடைக்காததால், டீ, காபி தவிர வேறு எதுவும் வழங்கப்படாது என்று அறிவித்துள்ளனர்.
வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு புக் செய்தாலும் பலருக்கு அதற்கான கட்டண ரசீது (Bill) கூட இன்னும் குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படவில்லை. புதிய சிலிண்டர்கள் புக் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பலர் தெரிவிக்கின்றனர்.
இவையெல்லாம், நாட்டில் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலைவதற்காக தெளிவாக சான்றுகளாக உள்ளன.
முடிவு:
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சிலிண்டருக்கு தட்டுப்பாடே இல்லை என்று அப்பட்டமான பொய்யை பரப்பி வருகிறார் பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன்.