
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
மேலும் அதில், "ராமராஜ்யம் - போராட்டத்திலிருந்து முடிவு வரை, அத்தியாயம் 1 - அமாவாசை, 20ம் நூற்றாண்டில் கோவில் கட்டுவதற்கான போராட்டத்தின் கடைசி போர் மணி எப்படி ஒலித்தது என்பதை பாருங்கள்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவை பாஜகவினர் பலரும் தங்களது சமூக ஊடகப்பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.
Babur demolished the birthplace of Shri Ram and built the mosque in 1556. Watch "Ram Rajya - Sangharsh Se Parinam Tak" Series 1 "Amavasya" to know more about the culmination of the temple-building struggle in the 20th century...
बाबरने श्री राम जन्मस्थानी असलेले मंदिर पाडून 1556… pic.twitter.com/LZbZSx90Hx
— Chandrakant Patil (@ChDadaPatil) January 10, 2024
கி.பி 1556 இல், பாபர் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து ஒரு மசூதியை கட்டினார்.
ராமராஜ்யம்-போராட்டத்திலிருந்து முடிவு வரை அத்தியாயம் 1 அமாவாசையில் பாருங்கள், 20 ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டுவதற்கான போராட்டத்தின் கடைசி போர் முழக்கம் எப்படி ஒலித்தது.@blsanthosh… pic.twitter.com/BpNC0k3rMN
— Immanuvel Dinakaran (@Imman_BJP) January 10, 2024
உண்மை என்ன ?
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் கீழ் வெளியிடப்படும், 11-ம் வகுப்பு வரலாறு பாடப்புத்தகத்தில், "இந்தியாவை ஆட்சி செய்து வந்த இப்ராகிம் லோடியை வீழ்த்த, அவருடைய எதிரி தெளலத்கான் லோடியின் வேண்டுகோளின் பெயரிலேயே பாபர் இந்தியாவிற்குள் வந்து முகலாய பேரரசை முதன்முதலில் தோற்றுவித்தார் என்பதையும், இறுதியாக கிபி 1529-ல் நடைபெற்ற காக்ரா போரில் வெற்றி பெற்று திரும்பி வரும் வழியில் கிபி 1530-ல் இறந்தார் என்பதையும் அறிய முடிந்தது.

பின்னர் ஆட்சிக்கு வந்த பாபரின் அடுத்த வாரிசான ஹூமாயூன், 1530 முதல் 1540 வரையிலும், பின்னர் ஷெர்ஷா அரசரின் தோல்விக்கு பின்பு மீண்டும் 1555 முதல் 1556 வரையிலும் இந்தியாவை ஆட்சி செய்தார். இறுதியாக கிபி 1556-ல் தனது டில்லி கோட்டையின் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து ஹூமாயூன் இறந்து போனார். இதன் மூலம் 1556ல் முகலாய பேரரசர்களான பாபரும், அவருடைய மகனான ஹூமாயூனும் இறந்துவிட்டனர் என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

இதே போன்று இந்தியா டுடே கட்டுரையில் கடந்த 2019-ல் வெளியிட்டுள்ள கட்டுரையிலும், பாபர் கிபி 1530-ஆம் ஆண்டிலேயே இறந்து விட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் The Britannica இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில், பாபர் மசூதி 1528-ம் ஆண்டு செப்டம்பரில் கட்டப்பட்டது என்றும், இது பாபரின் ஆணைப்படி பாபரின் அதிகாரியான மீர் பாக்கி என்பவரால் சம்பல் மற்றும் பானிபட்டில் உள்ள மற்ற இரண்டு மசூதிகளுடன் சேர்த்து கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு:
நம் தேடலில், கிபி 1556-ல் பாபர் அயோத்தியில் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக பாஜக பரப்பும் தகவல் தவறானவை. கிபி 1530ம் ஆண்டே பாபர் இறந்து விட்டார் என்பதை அறிய முடிகிறது.