YouTurn

ஆந்திர அரசு வக்ஃப் வாரியத்தைக் கலைத்து விட்டதாகப் பரவும் தவறான தகவல்!

ஆந்திர அரசு வக்ஃப் வாரியத்தைக் கலைத்து விட்டதாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக 2023-ல் வெளியிடப்பட்ட அரசாணை மட்டுமே திரும்பப்பெறப்பட்டுள்ளது. மீண்டும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வக்ஃப் வாரியம் செயல்படும் என்றே ஆந்திர அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

ஆந்திரா அரசு வக்ஃபு முறையை ஒழித்துவிட்டது.

image.png

X link

விரிவான விளக்கம்

மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்கள் ஆகியவற்றின் பெயரில் தானமாக வழங்கப்பட்டவையே வக்ஃப் சொத்துக்கள் எனப்படுகிறது. இதனைக் கண்காணிக்க 1954-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. பிறகு, அனைத்து மாநிலங்களிலும் வக்ஃப் வாரியங்கள் ஏற்படுத்தப்பட்டன. 


இச்சட்டத்தில் திருத்தம் செய்ய சில மாதங்களுக்கு முன்னர் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மக்களவையில் ‘வக்ஃப் (திருத்தம்) மசோதா 2024’-ஐ தாக்கல் செய்தது. முஸ்லிம்களிடமிருந்து வக்ஃப் சொத்துக்களை அபகரிப்பதற்காகவே பாஜக இச்சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதாக இஸ்லாமிய அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டுகின்றனர். 


https://x.com/i/web/status/1863130772196171950


இந்நிலையில் ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான மாநில அரசு வக்ஃப் வாரியத்தைக் கலைத்து அரசாணை வெளியிட்டுள்ளதாக ஒரு செய்தி பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. அப்பதிவுகளில் ’Times Now’ ஊடகத்தில் வெளியான செய்தி மேற்கோள் காட்டப்படுகிறது. 


https://x.com/i/web/status/1863541315381993649


உண்மை என்ன?


ஆந்திர மாநிலத்தில் வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டதாகப் பரவும் செய்தி குறித்து இணையத்தில் தேடினோம். இது தொடர்பாக ஆந்திர அரசு வெளியிட்ட அரசாணை கடந்த 1-ம் தேதி ANI எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டதாக எந்த தகவலும் இடம் பெறவில்லை. மாறாக முந்தைய ஆட்சிக்காலத்தில் வக்ஃப் வாரிய உறுப்பினர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைதான் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது. 


https://x.com/i/web/status/1863051193142087883


ஜெகன் மோகன் தலைமையிலான கடந்த ஆட்சியின் போது, வக்ஃப் வாரிய உறுப்​பினர்கள் நியமனம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டது (G.O.Ms.No.47). இதனை எதிர்த்து 13 ரிட் மனுக்கள் ஆந்திரா உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்​தில், வக்பு வாரிய தலைவர் தேர்​தலுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டது.


இதனால், வக்ஃப் வாரியம் செயல்படாமல் இருந்த நிலையில், முந்தைய அரசாணையைத் திரும்பப் பெற்று புதிய அரசாணை ஒன்றை சந்திரபாபு தலைமையிலான அரசு வெளி​யிட்​டுள்​ளது. 


‘Times Now’ ஊடகத்தின் செய்தியை பாஜகவின் ஐடி விங் பொறுப்பாளர் அமித் மாளவியா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, பரவக் கூடிய இதே மாதிரியான தகவலை பதிவிட்டுள்ளார். அதற்கு ஆந்திர மாநில அரசின் அதிகாரப் பூர்வ உண்மை கண்டறியும் குழு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. 


https://x.com/i/web/status/1863168598241694132


அதிலும் மேற்கண்ட தகவலை உறுதி செய்ய முடிகிறது. மேலும், இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து, புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வக்ஃப் வாரியம் விரைவில் அமைக்க ஆந்திர அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து வக்ஃப் வாரியம் என்ற முறையையே ஆந்திர அரசு கலைக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.


வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக முந்தைய ஜெகன் மோகன் அரசு வெளியிட்ட அரசாணை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், அதனை தற்போதைய அரசு திரும்பப் பெற்றுள்ளது. ஆனால், வக்ஃப் வாரியமே மொத்தமாகக் கலைக்கப்பட்டுவிட்டது போல் தவறான செய்தி பரப்பப்படுகிறது.


முடிவு:


ஆந்திராவில் வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டதாகப் பரவும் செய்தி திரிக்கப்பட்டுப் பரப்பப்படுகிறது. வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக 2023-ல் வெளியிடப்பட்ட அரசாணை மட்டுமே திரும்பப்பெறப்பட்டுள்ளது. மீண்டும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு வக்ஃப் வாரியம் செயல்படும் என்றே ஆந்திர அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க