யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சேலம் மாவட்டத்தில் தவெக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பிப்ரவரி 13 அன்று நடைபெற்றது. அதில், கூட்டத்தை ஏற்பாடு செய்யும் பணியிலிருந்த தன்னார்வலர்கள், மது பாட்டில்களுடன் இருப்பது போன்று செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் (AI) போலியாக புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
சேலம் மாவட்டத்தில் தவெக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் பிப்ரவரி 13 அன்று நடைபெற்றது. அதில், கூட்டத்தை ஏற்பாடு செய்யும் பணியிலிருந்த தன்னார்வலர்கள், மது பாட்டில்களுடன் இருப்பது போன்று புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
படை வீரர்கள் உற்சாகத்திற்கு குளு குளு சாராயம் #salem #சேலம் pic.twitter.com/21khMkj5Sp
உண்மை என்ன?
பரவி வரும் இந்த புகைப்படம் குறித்து கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். இந்த புகைப்படம் குறித்தான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை.
இதையடுத்து பரவி வரும் புகைப்படத்தை கூர்ந்து கவனிக்கையில், ஒவ்வொருவருக்கும் அருகருகே இரண்டு கைகள் இருப்பதை காண முடிந்தது. அதேபோல் தடுப்பு வேலிகளிலிருந்த கம்பிகள் உட்கார்ந்திருந்தவர்களின் உடலில் ஊருடுவி வெளியே வந்திருந்ததையும் தெளிவாக பார்க்கமுடிந்தது.

இந்நிலையில் இந்த வீடியோ ஏஐ மூலம் வீடியோ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதை உறுதி செய்ய, பரவி வரும் வீடியோவை Hive Moderation, TruthScan போன்ற செயற்கை நுண்ணறிவை கண்டறிய உதவும் இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியானது.


இதற்கு முன்பும் இதே போன்று ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவின. அப்போதே இது குறித்து ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க : நியூயார்க் மெட்ரோ ரயிலில் நடந்த சம்பவம் என்று பரவும் AI வீடியோ!
பிரிட்டிஷ் போலீஸ் நாயிக்கு இறுதி சடங்கு என்று பரவும் AI வீடியோ!
முடிவு:
எனவே, சேலம் மாவட்டத்தில் தவெக கட்சியின் கூட்டத்தை ஏற்பாடு செய்யும் பணியிலிருந்த தன்னார்வலர்கள், மது பாட்டில்களுடன் இருப்பது போன்று பரவும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது.
