YouTurn

பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கிய முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் AI புகைப்படங்கள்!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கிய முதல்வர் ஸ்டாலின் எனப் பரவும் AI புகைப்படங்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

நிதி ஆயோக் கூட்டம்.. ஆரம்பமான ஒரு மணிநேரத்தில்..  முடிவதற்கு முன்பு ஒரு மணிநேரத்தில்.. 


X Link | Archive Link

விரிவான விளக்கம்

நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடியும், தமிழ்நாடு முதலவர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று குறிப்பிட்டு இரண்டு புகைப்படங்களை ஒப்பீடு செய்து, புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. மேலும் பரவி வரும் அப்பதிவுகளில் “நிதி ஆயோக் கூட்டம் ஆரம்பமான ஒரு மணிநேரத்தில் மற்றும் முடிவதற்கு முன்பு ஒரு மணிநேரத்தில்” என்றும் குறிப்பிட்டும் பரப்பப்பட்டு வருகிறது. 



உண்மை என்ன?


பரவி வரும் புகைப்படங்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இவை உண்மையான புகைப்படங்கள் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


கடந்த 2025 மே 25 அன்று “Money Control” ஊடகத்தின் எக்ஸ் பக்கத்தில் இந்தியாக் கூட்டணியில் உள்ள முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கோட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துக்கொண்ட காட்சிகள் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் அருகே சென்று பேசுவதைப் போன்றே காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 


#WATCH | From MK Stalin to Revanth Reddy: Prime Minister Narendra Modi meets INDIA Bloc CMs At NITI Meet#NarendraModi #NITIAayog #MKStalin #RevanthReddy #HemantSoren pic.twitter.com/bT2N9fwzEJ

— Moneycontrol (@moneycontrolcom) May 25, 2025


இதே போன்று, “Money Control“ இணையப் பக்கத்திலும், “நிதி ஆயோக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் வரிகளில் 50% பங்கு மற்றும் கல்வி நிதியை விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துக்கொண்டது போன்ற புகைப்படம் பதிவு செய்யப்பட்டிருந்தது.


 

மேலும் இது குறித்து “The Hindu”, “Newsdrum“ உட்பட மற்ற ஊடகங்களிலும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. எதிலும் பரவி வரும் புகைப்படங்களில் இருப்பது போன்று பிரதமர் மோடியின் கால்களில் முதல்வர் ஸ்டாலின் விழுந்து வணங்குவது போன்ற காட்சிகள் இடம்பெறவில்லை. 



எனவே பரவி வரும் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழவே அது குறித்து, “Decopy“ இணையப்பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்தோம். ஆய்வின் முடிவில் அவை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் தான் என்பதை உறுதி செய்ய முடிந்தது. 



முடிவு: 


நம் தேடலில், கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதல்வர் சந்தித்து பேசினார். அப்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படத்தை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க